எந்த காலக் கட்டத்திலும் சிந்திக்கும், சிரிக்கும் திறன் மிக்க இந்த ஆபூர்வ விலங்கினமான மனித இனம் "நாம் எங்கிருந்து" வருகிறோம் என்று அறிந்து கொள்வதில் நாட்ட மிக்கதாகவே இருந்து வந்திருக்கிறது.
அதற்கென மீண்டும் ஒரு உதாரணமாக இப்பொழு மரபணு ஆய்வுக்களின் மூலமாக மனித இனமும் சிம்பன்சி வகை மனித-குரங்குகளுக்குமிடையே இனக்கலப்பு நடந்திருப்பதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இவ் ஆய்வு இரண்டு விதமான சான்றுகளை அதற்கு வழங்கி ஊர்ஜிதப் படுத்தியுள்ளது. ஃபாசில்களில் மனிதனுக்கும் சிம்பன்சிகளுக்கும் இடைப்பட்ட காலக் கட்டத்திலிருந்து கிடைத்த பற்கள், மண்டை ஓடுகள் போன்றவை, ஒப்புமை உடையாதாக இருப்பதும்.
இரண்டாவதாக, மரபணுக்களில் காணப்படும் வித்தியாசங்கள். இயற்கையாகவே, இயற்கை தேர்ந்தெடுப்பின் (Nutaural Selection) பொருத்து எக்ஸ்-வகை குரோமொசோம்களில் நடைபெறும் கடைசி மாற்றமே மற்றொரு வகை விலங்கினமாக உருவெடுக்க சாத்தியப் படுகிறதாம்.
அதன் பொருட்டு இந்த எக்ஸ் வகை குரோமோசொம்களில் விட்டக் குறை தொட்ட குறையாக மிச்சம் எஞ்சியிருக்கக் கூடிய மரபணு சார்ந்த விசயங்கள் இன்னமும் கொரில்லாக்கள், சிம்பன்சி மற்றும் மனித மரபணுக்களில் காணப்படுகிறதாம்.
சரி இதனை எதனைக் கொண்டு எத்துனை காலங்களுக்கு முன்னால் அவைகள் ஒன்றிலிருந்து மற்றொரு இனமாக பிரிந்து சென்றிருக்கும் என்று அறிகிறார்கள் என்று கேட்டால்... "மூலக்கூறு கடிகாரம் (Molecular Clock)" என்ற கோட்பாட்டின் அடிப்படையில், எவ்வளவு தூரம் அவைகள் மரபணுக் கூறுகளின் வழியே பயணித்து மரபணு வேறுபாடுகள் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதனை பொருத்து, இவர்கள் எவ்வளவு தொலைவு சொந்தக்காரர்கள் இன்று வாழும் இந்த மனிதக் குரங்கினங்கள் அதாவது நமக்கு தூரத்து சொந்தமா இல்லை நெருங்கிய சொந்தமான்னு தீர்மானிக்கிறார்களாம்.
அப்படிப் பார்த்தோம்னா, நாம சிம்பன்சிகளிலிருந்து ஒரு 6.3 - 4 மில்லியன் வருடங்களுக்கு முன்புதான் பிரிந்து வந்து இருக்கிறோமாம், ஆனா, இந்த பரட்டை தலை குரங்கு இல்ல, அதான் நம்ம "ஆட்டுக்கார அலமேலு" படத்தில எல்லாம் நடிக்குமே அந்த ஆளுக்கும் நமக்கும் 20 மில்லியன் வருஷத்துக்கு முன்னமே தொப்புள் கொடி அறுந்து போச்சாம்.
எப்போவாவது நீங்கள் இந்த மனிதக் குரங்குகளின் சோஷ்டையை நின்று கவனித்துப் பார்த்திருக்கீறிர்களா? பார்த்திருந்தால் தெரியும் மேற் கூறிய ஆராய்ச்சில் லாஜிக்கலாகவே நிறைய தொடர்பு இருப்பதை... உதாரணதுக்கு போனோபோ (Bonobo) என்னும் ஒரு துணை இன சிம்பன்சி, நம்ம மாதிரியே சாப்பிட்டு விட்டு பல் இடுக்குகளில் அகப்பட்டுள்ள பழ நார், மற்றும் இதர ஐட்டங்களை சிறு குச்சி கொண்டோ அல்லது ஆட்காட்டி மற்றும் கட்டைவிரலைக் கொண்டோ நம்மை போலவே பல் இடுக்கிலிருந்து பிரியாணி சாப்பிட்டு விட்டு பல்லிடுக்கில் மாட்டிக்கொண்ட கறித்துண்டை நாம் எடுக்க முயற்சி செய்வது போலவே இவைகளும் எடுக்க முயற்சிப்பதை, அடியேன் என் இரு கண்களாலும் பார்த்து வைத்திருக்கிறேன்.
இன்னொரு ஹைலைட், திருப்தியா சாப்பிட்டுவிட்டு கால்மேல் கால்போட்டு தூங்கும் பொழுது அடப் போங்க என்னாத்த சொல்றது...
Monday, July 24, 2006
Wednesday, July 12, 2006
"வெர்மின்" விலங்குகளே இன்று அரிதாகும் காரணம்...
"வெர்மின் (Vermin)" என்பது எந்த ஒரு விலங்கினமும் அதன் எண்ணிக்கையில் பல்கிப் பெருகி, சமூகத்திற்கு ஊறு விளைவிக்கும் யாவும் வெர்மின் என்ற கட்டமைப்பில் சேர்த்துவிடப் படுகிறது. இது போன்ற வெர்மின் வகைகளில் சில நமக்கு பரிச்சயமான பறவைகள் மற்றும் பாலூட்டிகளை வைத்து அவைகளுக்கு என்னதான் ஆகிறது இந்த காலக் கட்டத்தில் என்று பார்ப்போம்.
பறவைகள் இனத்தில் சிட்டுக் குருவி, காகம், மணிப் புறா மற்றும் பாலூட்டிகளில் வீட்டு எலி, பரட்டைத் தலை குரங்கு, முயல் இத்தியாதிகள் உடனடியாக நமது ஞாபகத்தில் வந்து போகும் விலங்கினங்களில் சில.
அவைகளும் இந் நாளில் நமது குளம் குட்டைகள் வற்றுவது போலவே, அவைகளின் நடமாட்டமும் குறைந்து வருகிறது. அதனை நமது நாகை சிவா கூட கவனித்து கேள்வியாக எழுப்பினார். சரி இப்பொழுது விசயத்திற்கு போவோம். இது போன்ற விலங்கினங்கள் முதலில் வெர்மினாக ஆவதற்கே எக்கச் சக்கமான வகையில் தனது இயற்கையான பழக்க வழக்கங்கலிருந்து மாறுபட்டு மாத்தியமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
உதாரணத்திற்கு சிட்டுக் குருவியும், மணிப்புறாவும் நமது வீட்டுக் கூரையிலே கூட கூடு கட்டி குடும்பம் நடத்தலாம். அப்படியெனில் நமது அண்மையிலான நடவடிக்கைகளையும் சகித்துக் கொண்டுதானே என்று பொருள். இன்று அது போன்ற வாய்புகள் கூட அவைகளுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் இன்றைய பிரட்சினை.
மனிதனின் மாறி வரும் வாழ்க்கை முறை, அன்று நடுத்தர இரண்டாம் தர சிற்றுராகவும், பேரூராகவும் இருந்ததெல்லாம் இன்று நகரமாகி வரும் இச் சூழலில் கட்டட அமைப்பு, அதனையொட்டிய போக்கு வரத்து வாகனக் கூட்டம், மக்கள், சத்தம், கான்கீரிட் தரைகள், இப்படி எத்தனை எத்தனையோ தடைச் சுவர்கள்.
அவைகளையும் தாண்டி வசிக்கும் இவைகளுக்கு உணவு அல்லது தண்ணீர்த் தேவை என வரும் பொழுது அவைகள் ஒரு பெரும் நகரத்தில் வசிக்கும் பொருட்டு எப்படிப் பெறமுடியும்? தினமும் சாலையையே கூட்டிப் பெருக்கி பளிச்சென்று சுத்தமாக வைத்துக் கொள்ளும் நாம், வீட்டுத் தோட்டத்தில் உள்ள புல் தரைகளையும் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நுனி வெட்டி அழகு பார்க்கும் நாம், அதில் உள்ள நெல் மணிகளையும் (அவைகளின் உணவு) சேர்த்தல்லவா வெட்டி விடுகிறோம்.
அந்த புற்களையும் நல்ல பச்சையாக வளர்க்க எத்தனித்து எத்தனை விதமான உரங்கள், அந்த உரங்கள் எத்தனை விதமான புழுக்களையும், பூச்சிகளையும் அழித்து இது போன்ற பறவைகளின் உணவு பற்றாக் குறையை ஏற்படுத்தி விடுகிறது.
மேலும் இப்பொழுது ஜரூராக இது போன்ற பறவைகள் கட்டடங்களின் மீது கூடு கட்டாமலிருக்க புது வகையான யுக்திகள் பொறிகளை (traps, scare tatctics, spikes etc) கொண்டு தடுக்கப் படுகிறது.
இதற்கெல்லாம் மேலாக, மற்றொரு முறையில் பல்கிப் பெருகிப் போன இந்த செல் பேசிகள் அவைகளுக்கான செல் டவர்கள் அவைகள் வெளிப்படுத்தும் நுண்ணலைகள்(electro magnetic radiation), எது போன்ற விளைவுகளை இவைகளில் ஏற்படுத்துகின்றன என்பதனை இன்னமும் அரிதியிட்டு கூறாத நிலையில், அவ்வலைகள் மனிதனில் மூளை புற்று நோயை உருவாக்கவல்லது எனவும் பேச்சு அடிப்பட்டுக் கொண்டுள்ளதை அறிந்துள்ளோம்.
இதனைவிட நேரடியாக நமது பசியின் கோரம் எவ்வளவுதான் தனிக்க உணவு வகைகள் இருந்தும் இவ் பறவைகளயும் உணவாக பெருமளவில் சில இடங்களில் உட்கொள்ளப் படுவதும், மற்றொரு காரணியோ இவைகளின் நடமாட்டம் குறைந்து காணப்படுவதற்கு.
பறவைகளும், ஏனைய பிராணிகளும் நம்மை விட இயற்கை அழிவு சார்ந்த சகிப்புத்தன்மையில் கொஞ்சம் தோல் மென்மையாக இருப்பதாகப் படவில்லை?
P.S: என் வீட்டுக் கூரையில் இப்பொழுது இரண்டு சிட்டுக் குருவி குடும்பங்கள் சந்தோஷமாக எனக்குத் தெரிந்து ஒரு நான்கு வருடங்களாக வசித்து வருகிறது, அதனைப் பற்றி நான் யோசிப்பதுண்டு, இப்பொழுது இவைகளுக்கு தாகம்மென்றால் பக்கத்தில் உள்ள தண்ணீர் நிலை எங்குள்ளது எப்படி அவைகள் இந்த பிரட்சினையை எதிர் கொள்கிறது என.
பறவைகள் இனத்தில் சிட்டுக் குருவி, காகம், மணிப் புறா மற்றும் பாலூட்டிகளில் வீட்டு எலி, பரட்டைத் தலை குரங்கு, முயல் இத்தியாதிகள் உடனடியாக நமது ஞாபகத்தில் வந்து போகும் விலங்கினங்களில் சில.
அவைகளும் இந் நாளில் நமது குளம் குட்டைகள் வற்றுவது போலவே, அவைகளின் நடமாட்டமும் குறைந்து வருகிறது. அதனை நமது நாகை சிவா கூட கவனித்து கேள்வியாக எழுப்பினார். சரி இப்பொழுது விசயத்திற்கு போவோம். இது போன்ற விலங்கினங்கள் முதலில் வெர்மினாக ஆவதற்கே எக்கச் சக்கமான வகையில் தனது இயற்கையான பழக்க வழக்கங்கலிருந்து மாறுபட்டு மாத்தியமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
உதாரணத்திற்கு சிட்டுக் குருவியும், மணிப்புறாவும் நமது வீட்டுக் கூரையிலே கூட கூடு கட்டி குடும்பம் நடத்தலாம். அப்படியெனில் நமது அண்மையிலான நடவடிக்கைகளையும் சகித்துக் கொண்டுதானே என்று பொருள். இன்று அது போன்ற வாய்புகள் கூட அவைகளுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் இன்றைய பிரட்சினை.
மனிதனின் மாறி வரும் வாழ்க்கை முறை, அன்று நடுத்தர இரண்டாம் தர சிற்றுராகவும், பேரூராகவும் இருந்ததெல்லாம் இன்று நகரமாகி வரும் இச் சூழலில் கட்டட அமைப்பு, அதனையொட்டிய போக்கு வரத்து வாகனக் கூட்டம், மக்கள், சத்தம், கான்கீரிட் தரைகள், இப்படி எத்தனை எத்தனையோ தடைச் சுவர்கள்.
அவைகளையும் தாண்டி வசிக்கும் இவைகளுக்கு உணவு அல்லது தண்ணீர்த் தேவை என வரும் பொழுது அவைகள் ஒரு பெரும் நகரத்தில் வசிக்கும் பொருட்டு எப்படிப் பெறமுடியும்? தினமும் சாலையையே கூட்டிப் பெருக்கி பளிச்சென்று சுத்தமாக வைத்துக் கொள்ளும் நாம், வீட்டுத் தோட்டத்தில் உள்ள புல் தரைகளையும் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நுனி வெட்டி அழகு பார்க்கும் நாம், அதில் உள்ள நெல் மணிகளையும் (அவைகளின் உணவு) சேர்த்தல்லவா வெட்டி விடுகிறோம்.
அந்த புற்களையும் நல்ல பச்சையாக வளர்க்க எத்தனித்து எத்தனை விதமான உரங்கள், அந்த உரங்கள் எத்தனை விதமான புழுக்களையும், பூச்சிகளையும் அழித்து இது போன்ற பறவைகளின் உணவு பற்றாக் குறையை ஏற்படுத்தி விடுகிறது.
மேலும் இப்பொழுது ஜரூராக இது போன்ற பறவைகள் கட்டடங்களின் மீது கூடு கட்டாமலிருக்க புது வகையான யுக்திகள் பொறிகளை (traps, scare tatctics, spikes etc) கொண்டு தடுக்கப் படுகிறது.
இதற்கெல்லாம் மேலாக, மற்றொரு முறையில் பல்கிப் பெருகிப் போன இந்த செல் பேசிகள் அவைகளுக்கான செல் டவர்கள் அவைகள் வெளிப்படுத்தும் நுண்ணலைகள்(electro magnetic radiation), எது போன்ற விளைவுகளை இவைகளில் ஏற்படுத்துகின்றன என்பதனை இன்னமும் அரிதியிட்டு கூறாத நிலையில், அவ்வலைகள் மனிதனில் மூளை புற்று நோயை உருவாக்கவல்லது எனவும் பேச்சு அடிப்பட்டுக் கொண்டுள்ளதை அறிந்துள்ளோம்.
இதனைவிட நேரடியாக நமது பசியின் கோரம் எவ்வளவுதான் தனிக்க உணவு வகைகள் இருந்தும் இவ் பறவைகளயும் உணவாக பெருமளவில் சில இடங்களில் உட்கொள்ளப் படுவதும், மற்றொரு காரணியோ இவைகளின் நடமாட்டம் குறைந்து காணப்படுவதற்கு.
பறவைகளும், ஏனைய பிராணிகளும் நம்மை விட இயற்கை அழிவு சார்ந்த சகிப்புத்தன்மையில் கொஞ்சம் தோல் மென்மையாக இருப்பதாகப் படவில்லை?
P.S: என் வீட்டுக் கூரையில் இப்பொழுது இரண்டு சிட்டுக் குருவி குடும்பங்கள் சந்தோஷமாக எனக்குத் தெரிந்து ஒரு நான்கு வருடங்களாக வசித்து வருகிறது, அதனைப் பற்றி நான் யோசிப்பதுண்டு, இப்பொழுது இவைகளுக்கு தாகம்மென்றால் பக்கத்தில் உள்ள தண்ணீர் நிலை எங்குள்ளது எப்படி அவைகள் இந்த பிரட்சினையை எதிர் கொள்கிறது என.
Tuesday, July 11, 2006
"டைனோசார்" வெப்ப ரத்தப் பிராணியா?
எல்லா ஊர்வன பிராணிகளும் இது நாள் வரையிலும் "குளிர் ரத்தப் பிராணிகளே" என்று நம்பி வந்த அறிவியல் சமூகம் இப்பொழுது தனது புது ஆராய்ச்சிகளின் மூலம் "டைனோசார்" போன்றவைகள் ஊர்வன இனத்தில் வந்தாலும், இவைகள் வெப்ப ரத்தப் பிராணிகளாக வாழ்ந்திருக்கின்றன என்று கண்டுபிடித்துள்ளது.
ஊர்வன வகைப் பிராணிகள் தனது உடம்புச் சூட்டை கூட்டியோ குறைத்தோ வைத்துக் கொள்ள புற வெப்பத்தை நாடுகிறது, நாம் கூட கவனித்திருக்கலாம், முதலைகள் போன்றவைகள் சூரிய ஒளியில் படுத்து வெப்பத்தை கிரகித்துக் கூட்டியோ குறைத்துக் கொள்வதனை, இல்லையா? ஏனைய விலங்கினங்களான பாலூட்டிகள் மட்டும் பறவைகள் உடல் மெட்டபோலிக் நடவடிக்கைகளை கொண்டே உடம்புச் சூட்டை தக்கவைத்துக் கொள்கிறது.
இந் நிலையில் இப்பொழுது டைனோசார்களில் உடம்பின் எடையை வைத்து அவைகள் குளிர் அல்லது வெப்பத் ரத்தப் பிராணிகளாக வாழ்ந்திருக்கக் கூடும்மென்று இந்த புது வித ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக்கின்றன.
டைனோசார்களில் சிறியவை குளிர் ரத்தப் பிராணியாகவும் (20 டிகிரி செல்.), அவைகளின் உடல் எடை அதிகரித்துக் கொண்டே செல்லும் பட்சத்தில் (48 டிகிரி செல்.) வெப்ப ரத்தப் பிராணியாகவும் வாழ்ந்திருப்பதாக அறியப்படுகிறது.
இதற்கென அண்மைய காலத்து 11 வகையான ஊர்வன இனங்கள் தேர்ந்துதெடுக்கப் பட்டு மீண்டும அவைகளின் உடல் எடையை கணக்கில் கொண்டு உடம்பின் வெப்பச் சூடு ஒப்பீட்டு நடத்தி ஊர்ஜிதப் படுத்தப்பட்டுள்ளது.
ஊர்வன வகைப் பிராணிகள் தனது உடம்புச் சூட்டை கூட்டியோ குறைத்தோ வைத்துக் கொள்ள புற வெப்பத்தை நாடுகிறது, நாம் கூட கவனித்திருக்கலாம், முதலைகள் போன்றவைகள் சூரிய ஒளியில் படுத்து வெப்பத்தை கிரகித்துக் கூட்டியோ குறைத்துக் கொள்வதனை, இல்லையா? ஏனைய விலங்கினங்களான பாலூட்டிகள் மட்டும் பறவைகள் உடல் மெட்டபோலிக் நடவடிக்கைகளை கொண்டே உடம்புச் சூட்டை தக்கவைத்துக் கொள்கிறது.
இந் நிலையில் இப்பொழுது டைனோசார்களில் உடம்பின் எடையை வைத்து அவைகள் குளிர் அல்லது வெப்பத் ரத்தப் பிராணிகளாக வாழ்ந்திருக்கக் கூடும்மென்று இந்த புது வித ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக்கின்றன.
டைனோசார்களில் சிறியவை குளிர் ரத்தப் பிராணியாகவும் (20 டிகிரி செல்.), அவைகளின் உடல் எடை அதிகரித்துக் கொண்டே செல்லும் பட்சத்தில் (48 டிகிரி செல்.) வெப்ப ரத்தப் பிராணியாகவும் வாழ்ந்திருப்பதாக அறியப்படுகிறது.
இதற்கென அண்மைய காலத்து 11 வகையான ஊர்வன இனங்கள் தேர்ந்துதெடுக்கப் பட்டு மீண்டும அவைகளின் உடல் எடையை கணக்கில் கொண்டு உடம்பின் வெப்பச் சூடு ஒப்பீட்டு நடத்தி ஊர்ஜிதப் படுத்தப்பட்டுள்ளது.
Monday, July 03, 2006
முழிச்சுகிட்டே தூங்குவேனே...! : Mimicry Traits
விட்டில் பூச்சிய (moth) நாம எல்லோருக்கும் தெரியும், அதாங்க சும்மா செவனேன்னு ராத்திரி நேரத்தில நாம வீட்டு லைட்க்கு கீழே இறக்கையை பப்ரபான்னு விரிச்சுட்டு பளுப்பு அல்லது சாம்பல் நிறத்தில எப்படா அங்ஙன இருக்கிற சுவத்துப் பல்லி பதுங்கிப் பதுங்கி நகர்ந்து வந்து நம்மள காலி பண்ணுமின்னு (அதுக்கும் ஒரு தியரி இருக்கு prey-predator தொடர்ப பத்தி எழுத, அதையும் பின்னாடி சொல்றேன்) உட்காந்திருக்குமில்ல அந்த நபர் இனம்தான் பேசப் போற விசயம்.
இந்த விட்டில் பூச்சிக்கும், நமக்கு நிரம்ப பிடிச்ச (குறிப்பா... பொண்ணுங்களுக்கு) வண்ணத்துப் பூச்சிக்கும் (Butter Fly) ரொம்பத் தொடர்பு இருக்குது. அத எப்படி பிரிச்சுப் பார்க்கிறது அப்படிங்கிறத, குமுதத்தின் குறைந்த பட்சம் ஆறு வித்தியசங்கள் மாதிரி ஒரு ஆறு வித்தியாசங்களுடன் இன்னொரு பதிவில காண்போம். இப்ப நம்ம பய விட்டிலோட பரிணாம தேடலைப் பார்ப்போம்.
இந்தப் பசங்க ராத்திரியில ஊர் சுத்தறவுனுங்க, அதனால செவனேன்னு பகல் முழுக்க ஒரே இடத்தில அடைஞ்சுகிடந்து தூங்கிட்டு இருப்பானுங்க. இப்ப அதோட இறக்கை சம்பந்தமா கொஞ்சம் சொல்லிப்புடணும் முன்னலே நான் படம் ஒட்ரதிக்குள்லே... இதுகளுக்கு முன் இறக்கை (Fore Wing), பின் இறக்கைன்னு (Hind Wing) ரண்டும் மேலமேல இருக்கும்.
ஆனா சில வகை விட்டில்களுக்கு பின் ரக்கையில பெரிசா கண் மாதிரியே பெரும் புள்ளி ஒன்னு வலது பக்கமும் இடது பக்கமும், அத மறைச்சுகிட்டு இந்த முன் இறக்கை அச்சு அசாலா அவர் எது மேல உட்காந்து தூங்கிறாரோ அந்த இடம் மாதிரியே ரக்கை நிறத்தோட....கொர்... கொர்... இந்த செட் அப்-எ வச்சுகிட்டுத்தான் நம்ம ஆளு பொழப்ப தள்ளிகிட்டு இருக்கிறார்.
எப்படியா? அப்படி பகல் பொழுதில் தூங்கிட்டு இருக்கிறாரா, இருக்கும் போது எவனாவது எழுப்பி விட்டவோ, அல்லது அவரே அப்படி நினைச்சுகிட்டவோ அப்பப்போ டக்குன்னு மேல் இறக்கையை மேல தூக்கி, கீழ் இறக்கையை காமிப்பாரு அந்த முட்டை பொய்க் கண்ணோட.... இப்ப எங்கயாவது இருந்து பாத்துகிட்டு இருக்கிற பறவையோ இல்ல வேற எமனோ, சரி முழிச்சுகிட்டு இருக்கிறான் பக்கத்தில போன பறந்துபுடுவான், எதுக்கு தேவையில்லாமல் சக்தியை செலவு பண்ணிகிட்டு அப்படின்னு கொல பண்ண வாரவன் அப்படியே போயிடுவான்னு, இவரு இப்படி இயற்கையை கெஞ்சி கூத்தாடி பரிணாமத்தின் தயவால தலைவரு வாழ்கை ஓடுது...
நல்லா இருந்துச்சா இல்ல மண்டை காஞ்சி போச்சான்னு சொல்லுங்க...
இந்த விட்டில் பூச்சிக்கும், நமக்கு நிரம்ப பிடிச்ச (குறிப்பா... பொண்ணுங்களுக்கு) வண்ணத்துப் பூச்சிக்கும் (Butter Fly) ரொம்பத் தொடர்பு இருக்குது. அத எப்படி பிரிச்சுப் பார்க்கிறது அப்படிங்கிறத, குமுதத்தின் குறைந்த பட்சம் ஆறு வித்தியசங்கள் மாதிரி ஒரு ஆறு வித்தியாசங்களுடன் இன்னொரு பதிவில காண்போம். இப்ப நம்ம பய விட்டிலோட பரிணாம தேடலைப் பார்ப்போம்.
இந்தப் பசங்க ராத்திரியில ஊர் சுத்தறவுனுங்க, அதனால செவனேன்னு பகல் முழுக்க ஒரே இடத்தில அடைஞ்சுகிடந்து தூங்கிட்டு இருப்பானுங்க. இப்ப அதோட இறக்கை சம்பந்தமா கொஞ்சம் சொல்லிப்புடணும் முன்னலே நான் படம் ஒட்ரதிக்குள்லே... இதுகளுக்கு முன் இறக்கை (Fore Wing), பின் இறக்கைன்னு (Hind Wing) ரண்டும் மேலமேல இருக்கும்.
ஆனா சில வகை விட்டில்களுக்கு பின் ரக்கையில பெரிசா கண் மாதிரியே பெரும் புள்ளி ஒன்னு வலது பக்கமும் இடது பக்கமும், அத மறைச்சுகிட்டு இந்த முன் இறக்கை அச்சு அசாலா அவர் எது மேல உட்காந்து தூங்கிறாரோ அந்த இடம் மாதிரியே ரக்கை நிறத்தோட....கொர்... கொர்... இந்த செட் அப்-எ வச்சுகிட்டுத்தான் நம்ம ஆளு பொழப்ப தள்ளிகிட்டு இருக்கிறார்.
எப்படியா? அப்படி பகல் பொழுதில் தூங்கிட்டு இருக்கிறாரா, இருக்கும் போது எவனாவது எழுப்பி விட்டவோ, அல்லது அவரே அப்படி நினைச்சுகிட்டவோ அப்பப்போ டக்குன்னு மேல் இறக்கையை மேல தூக்கி, கீழ் இறக்கையை காமிப்பாரு அந்த முட்டை பொய்க் கண்ணோட.... இப்ப எங்கயாவது இருந்து பாத்துகிட்டு இருக்கிற பறவையோ இல்ல வேற எமனோ, சரி முழிச்சுகிட்டு இருக்கிறான் பக்கத்தில போன பறந்துபுடுவான், எதுக்கு தேவையில்லாமல் சக்தியை செலவு பண்ணிகிட்டு அப்படின்னு கொல பண்ண வாரவன் அப்படியே போயிடுவான்னு, இவரு இப்படி இயற்கையை கெஞ்சி கூத்தாடி பரிணாமத்தின் தயவால தலைவரு வாழ்கை ஓடுது...
நல்லா இருந்துச்சா இல்ல மண்டை காஞ்சி போச்சான்னு சொல்லுங்க...
Labels:
Butterfly,
Moths,
வண்ணத்துப் பூச்சி,
விட்டில் பூச்சி
Subscribe to:
Posts (Atom)