அன்மையில் லூசியும், அவரின் குழந்தையை ஒத்த கயல்விழியும் ஆஸ்ரோலோபித்தீகஸ் அஃரென்சிஸ் என்ற இன வகை மனித மூதாதைகள் என்பதும் ஒரே ஏரியாவிலிருந்து அவர்களின் எலும்பு மிச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன என்றும் தெரிந்து கொண்டோம்.
இப்பொழுது எப்படி இந்த லூசியும், கயல்விழியும் மரத்திலிருந்து இறங்கி இருகால்களை மட்டுமே நம்பி சமவெளியில் நடந்திருக்கக் கூடும் என்பதனைப் பற்றி சிறு கண்ணொட்டத்துடன், சில படங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென்றுதான் இந்தப் பதிவு.
ஒரு 6லிருந்து8 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் காடுகளில் வசித்த விலங்குகள் தடாலென ஒரு பேரழிவை சந்தித்தாம் (mass extinction). அதனையொட்டி மிச்சம் மீதியிருந்த விலங்கினங்களின் தகவமைப்பு திறனும் இருக்கும் சுற்றுப்புறச் சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு பரிணமித்ததாம்.
அதன்பொருட்டே இந்த லூசியும், கயல்விழியும் மரங்களில் வாழ்ந்தவர்கள் வேறு வழியில்லாமல், சமவெளிகளில் வாழ நேரிட்டு கொஞ்சம், கொஞ்சமாக எழுந்து நடந்தால்தான் எதிர் வரும் எதிராளியை காணமுடியும் அப்படி காணும் பொருட்டு தூரத்திலேயே கண்டுணர்ந்து தப்பிப்பதற்கு ஏதுவாகும் என்பதற்கினங்க கண்களின் நேர் கொண்ட பார்வையும், இடம் பெயர்வுக்கென இரு கால்களில் எழுந்து நின்று நடக்கும் திறனும், மற்றவைகளும் காலத்தினூடையே கைவரப் பெற்றிக்ககூடுமென அறியப்படுகிறது.
இவர்களே பின்னாலில் ஹோமோ சாபியன்ஸ் என்கிற 'நாம்' உப கிளையாக பரிணமிக்க உந்துதலாக அமைந்ததாம்.
சரி இப்பொழுது லூசியும் அவரது கணவரும் எப்படி ஒரு மாலை நேர நடை பயில சென்றிக்கக் கூடும்... நீங்களே பாருங்கள், எப்படி கூலாக எந்த டிஸ்-ஆர்டர்ஸ், டிவர்ஸ் கோர்ட் பற்றிய பிரஞைகளுமில்லாமல், காலில் ஆடிடாஸ் கூட இல்லாமல் பனியில் ஓர் நடை :-)...

லூசியின் பாஸ்போர்ட் சைஸ் படம் அமெரிக்கா வருவதற்கு விசா எடுக்கும் நிமித்தமாக எடுத்தது... :-))...

லூசியின் குழந்தை கயல்விழியின் பாஸ்போர்ட் சைஸ் படம் வெள்ளத்தில் அடித்து செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு எடுத்தது ;-((

வயசாகிப் போன லூசி...
