Tuesday, September 26, 2006

அம்மா லூசியும், பெண் கயல்விழியும் - படக் கதை!!!

போன வாரத்தில் போட்ட இந்த பதிவில் பாலியோ-ஆன்ந்ரோபாலாஜி துறையைபற்றியும் அதன் கடினமான அணுகுமுறையும் பற்றிம் சொல்லியிருந்தேன். இருப்பினும் அவர்கள் அவ்வாறு இந்த இணைக்கும் பாலங்கள் (missing link) என்று அழைக்கப்படும் மனித மூதாதையர்களை கண்டெடுக்கும் ஒவ்வொரு முறையும் நமக்கு நம் வழித்தோன்றல் பற்றி அறிந்து கொள்ள எக்கச்சக்கமான வழி வகைகள் பிறப்பதாக கருதுகிறார்கள்.

அன்மையில் லூசியும், அவரின் குழந்தையை ஒத்த கயல்விழியும் ஆஸ்ரோலோபித்தீகஸ் அஃரென்சிஸ் என்ற இன வகை மனித மூதாதைகள் என்பதும் ஒரே ஏரியாவிலிருந்து அவர்களின் எலும்பு மிச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன என்றும் தெரிந்து கொண்டோம்.

இப்பொழுது எப்படி இந்த லூசியும், கயல்விழியும் மரத்திலிருந்து இறங்கி இருகால்களை மட்டுமே நம்பி சமவெளியில் நடந்திருக்கக் கூடும் என்பதனைப் பற்றி சிறு கண்ணொட்டத்துடன், சில படங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென்றுதான் இந்தப் பதிவு.

ஒரு 6லிருந்து8 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் காடுகளில் வசித்த விலங்குகள் தடாலென ஒரு பேரழிவை சந்தித்தாம் (mass extinction). அதனையொட்டி மிச்சம் மீதியிருந்த விலங்கினங்களின் தகவமைப்பு திறனும் இருக்கும் சுற்றுப்புறச் சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு பரிணமித்ததாம்.

அதன்பொருட்டே இந்த லூசியும், கயல்விழியும் மரங்களில் வாழ்ந்தவர்கள் வேறு வழியில்லாமல், சமவெளிகளில் வாழ நேரிட்டு கொஞ்சம், கொஞ்சமாக எழுந்து நடந்தால்தான் எதிர் வரும் எதிராளியை காணமுடியும் அப்படி காணும் பொருட்டு தூரத்திலேயே கண்டுணர்ந்து தப்பிப்பதற்கு ஏதுவாகும் என்பதற்கினங்க கண்களின் நேர் கொண்ட பார்வையும், இடம் பெயர்வுக்கென இரு கால்களில் எழுந்து நின்று நடக்கும் திறனும், மற்றவைகளும் காலத்தினூடையே கைவரப் பெற்றிக்ககூடுமென அறியப்படுகிறது.

இவர்களே பின்னாலில் ஹோமோ சாபியன்ஸ் என்கிற 'நாம்' உப கிளையாக பரிணமிக்க உந்துதலாக அமைந்ததாம்.

சரி இப்பொழுது லூசியும் அவரது கணவரும் எப்படி ஒரு மாலை நேர நடை பயில சென்றிக்கக் கூடும்... நீங்களே பாருங்கள், எப்படி கூலாக எந்த டிஸ்-ஆர்டர்ஸ், டிவர்ஸ் கோர்ட் பற்றிய பிரஞைகளுமில்லாமல், காலில் ஆடிடாஸ் கூட இல்லாமல் பனியில் ஓர் நடை :-)...

Image Hosted by ImageShack.us

லூசியின் பாஸ்போர்ட் சைஸ் படம் அமெரிக்கா வருவதற்கு விசா எடுக்கும் நிமித்தமாக எடுத்தது... :-))...

Image Hosted by ImageShack.us

லூசியின் குழந்தை கயல்விழியின் பாஸ்போர்ட் சைஸ் படம் வெள்ளத்தில் அடித்து செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு எடுத்தது ;-((

Image Hosted by ImageShack.us

வயசாகிப் போன லூசி...

Image Hosted by ImageShack.us

Thursday, September 21, 2006

3ல் மரணித்த 3 மில்லியன் வருட பரிணாமக் கயல்விழி...

சில ஆண்டுகளுக்கு முன்பு ஈத்தியோப்பியாவில் ஒரு ஏரி போன்ற அமைப்பிற்கு அருகே சில சிதைந்து போன மனித மண்டையோடு மற்றும் இதர உடல் பாக எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டன. பிறகு கார்பன் தேதி குறிப்பிட்டின்படி (Carbon Dating) அது ஒரு பெண்ணின் எலும்புகள் எனவும் சுமார் ஒரு 3 மில்லியன் வருடங்களுக்கு முன்பு ஆஃப்ரிகா கண்டத்தில் வாழ்ந்த ஆஸ்ரோலோபித்தீகஸ் அஃரென்சிஸ் (Australopithecus afarensis) எனும் வகை மனித மூதாதைகள் இனத்தை சேர்ந்தது எனவும் கண்டறியப்பட்டது.

அதற்கு லூசி எனவும் பெயரிடப்பட்டது.லூசி ஒருநாள் நோய் வாய் பட்டிருக்கும் பொழுது ஏரிக்கு நடந்து வரும் பட்சத்தில் ஏரிக்கு அருகிலேயே தடுமாறி மாண்டிருக்கக் கூடும் என்றும் கணிக்கப்பட்டது.

Image Hosted by ImageShack.us

இப்பொழுது அந்த ஏரியாவிற்கு மிக அருகிலேயே ஒரு மூன்று வயது மதிக்கத்தக்க கைக்குழந்தையின் மண்டையோடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இப்ப நாமே இந்த குழந்தைக்கு ஒரு பெயர் கொடுத்திடுவோம். கயல்விழி. சுலபமாக இருக்கும் பேசுவதற்கு என்பதற்காக. கயல்விழியும், லூசியின் இனத்தை சார்ந்தவராம். இவர்கள் சுமாருக்கு 3 லிரிந்து 3.7 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த நமது மூதாதையர்கள்.

சொல்லப்போனால், இந்த பாலியோஆன்ந்ரோபாலாஜி (தமிழ் மொழிபெயர்ப்பு - தேவை ) துறை ஒரு கடினமான ஏரியா. ஒரு சின்ன சில்லு எலும்பு துண்டு கிடைக்கிறதுக்கே மாத கணக்கில் பொறுமையாக மண்தோண்டு கனரக வாகனங்களைக் கொண்டு தோண்டாமல், மிக மென்மையாக முட்டிக்கால் தேய அங்குலம் அங்குலமாக கண்ணில் விளக்கெண்ணை விட்டுத் துழாவ வேண்டும்.

அப்படியே ஒரு பல்லு கிடைத்தாலும், மண்ணு மாதிரியே நிறத்தோட சின்ன ஒரு கல்லு மாதிரி கூட இருக்கலாம், அப்பன்ன எவ்ளோ கவனத்தோட பார்க்கணும் பாருங்க.

அது அப்படி இருக்கும் பொழுது இப்படி சுளையாக, ஒரு கபாலம் கண்டெடுக்கிறது, அதுவும் நமக்கு மிக நெருங்கிய சொந்தம் ஒண்ணு ரொம்ப ரொம்ப அபூர்வங்க.

இந்த கண்டெடுப்பில் என்ன ஒரு சிறப்புன்னா, இது போன்ற கயல்விழி ஒத்த கைக்குழந்தைங்களோட எலும்புங்க கிடைக்கிறது ரொம்ப அரிதாம். அதுவும் மண்டையோடு சிந்தமா, சிதையாமல் கிடைத்தது இதுவே முதல் முறையாம். அதினால கண்டெடுத்தவங்களுக்கு பம்பர் லாட்டரி சீட்டு விழுந்த கணக்க ஏகப்பட்ட சந்தோஷமாம்.

இதற்கு முன்னால் நம்மோடு சமகாலம் வரையிலும் வாழ்ந்த நியான்டர்தால் வகை குழந்தை மண்டையோடு சிரியாவில் கண்டெடுக்கப்பட்டது, இருப்பினும் கயல்விழி வாழ்ந்த வருடங்களோட ஒப்பிடும் பொழுது நியாண்டர்தால் கிடைத்ததில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை என்று ஒப்புக்கொள்ள வேண்டி இருக்கிறதாம்.

கயல்விழி மண்டையோடு மற்றும் இதர உடல் எலும்புகளை கொண்டு பார்க்கும் பொழுது, கயல் நம்மைப் போலவே இருகால்களை (Bipedal walk) கொண்டு நிமிர்ந்து நடந்து திரிந்திருப்பதாகவும், கைவிரல்களை கொண்டு பார்க்கும் பொழுது மரம் நிறைய ஏறியிருக்கலாம் என்றும் அறியப்பட்டுள்ளது.

கயல்விழி எப்படி தொல்பொருளாக ஆகிப்போனால் என்பதற்கு கண்டெடுத்த இடத்தின் நிலவரத்தை கொண்டு, அவள் ஒரு வெள்ள நேரத்தில் மரணித்து, மணல்படுகையில் கற்களை கொண்டு புதைக்கப்பட்டிருக்கலாமென்று கருதப்படுகிறது.

கிடைத்த எலுப்புகளை கொண்டு அம்மாவைப் போன்ற லூசிக்கும், குழந்தை கயலுக்கும் வளர்ச்சி அடிப்படையில் சில வேறுபாடுகளை கண்டறிவதோடு, நமக்கும் அவர்களுக்கும் மிடையே தொடர்புகள் இப்படி பல விசயங்களை கண்டறிய உதவுமாம்.

கயல்விழியின் அத்மா சாந்தியடைய எல்லோரும் ஒரு நிமிடம் மானிட்டர்களுக்கு முன்னால் கண் மூடி மொளன அஞ்சலி சொலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.



பி.கு: இப்படி 3 மில்லியன் வருஷங்களுக்கு முன்பு வாழ்ந்த கயல்விழி எல்லாம் கண்டெக்கிறாய்ங்க, உசிரோட இருக்கிற தீவிர வாதிகள கண்டுபிடிக்க முடியலேயே...ஷேம், ஷேம் பப்பி ஷேம்...
Related Posts with Thumbnails