நேற்று அவசர அவசரமா மூச்சிறைக்க நம்ம

அதாவது ஏன் மனித மூதாதையர்கள் நான்கு கால்களில்(quadrupedal) நடந்து திரிந்ததை விட்டுவிட்டு எச் சூழல் அவர்களை இரண்டு கால்களைக் (bipedal) கொண்டு நடக்க உந்துவித்ததுன்னு ஓர் அராய்ச்சிக்கான படம் அந்த பத்திரிக்கைல இருந்துச்சு.
இதில பாருங்க ஆப்ஃரிக்கா சம வெளிகளில் நம் மூதாதையர்கள் தோன்றிய பொழுது சக வாலில்லா குரங்குகளிலிருந்து கொஞ்ச கொஞ்சமாகத்தான் மாற்றங்கள் புற அமைப்பில் நடைபெற்றிருக்கிறது. இதில் ஒன்றுதான் இந்த இரு கால்களில் எழுந்து நின்ற தகவமைப்பும்.

ஆனால், வாஷிங்டன் மட்டும் கலிஃபோர்னிய பல்கலை கழங்களில் நடத்தப் பட்ட ஓர் அன்மைய ஆராய்ச்சின் பேரில் புதிதாக ஒன்றும் தெரியவந்திருக்கிறது. அதாவது, இரண்டு கால்களில் எழுந்து நடந்ததின் மூலமாக "நிறைய கலோரிகள் சேமிப்பதற்கெனவும்" என்பதே அவ் ஆராய்ச்சின் கண்டுபிடிப்பு.
இதனை நான்கு கால்களில் நடக்கும் ஜீவராசிகளுக்கும், இரண்டு கால்களில் நடக்க வைக்கக் கூடிய சிம்பன்சிகளுக்கும் உள்ள சக்தி இழப்பை நம்மோடு தொடர்புப் படுத்தி பார்க்கும் பொழுது நாம் கிட்டத்தட்ட 75 சதவிகிதம் அதிக சக்தி சேமிப்பு பண்ணுகிறோமாம், இந்த இரு கால்களை கொண்டு நடப்பதின் மூலமாக.
உடம்பின் இடுப்புப் பகுதிக்கு மேலே பருமனாக இருப்பதை விட இந்த கால்கள் குச்சியாக இருப்பதும் இதன் பொருட்டுத்தானோ (சக்தி சேமிப்பதற்கெனவும், நடையை துரிதப் படுத்தவும்தானா, அப்ப) ???