பூச்சிகளுக்கு மண்டை எங்க இருக்கு, உடம்பு எங்கேயிருந்து தொடங்குதுன்னு கண்டுபிடிக்கிறதே பெரிய விசயம், இதில அதுகளுக்கு மூளை இருக்குன்ன நம்புவோமா? அதிலும் இந்த ஜீவராசிகளின் உலகத்திலேயே, பூச்சிகளுக்குத்தான் சிறப்பு கண்கள் வழங்கப்பட்டிருக்கிறது என்றால், சொல்லவே வேண்டாம். நமக்கெல்லாம் ஆச்சர்யம் பீரிட்டு கிளம்ப.

ஆனா, இந்த பூச்சிகளின் உலகமில்லாமல் இன்னொருத்தரும் இந்த சிறப்பு அமைப்பை பகிர்ந்துக்கிறார், அவருதான் கடல்ல வசிக்கிற ஆக்டோபஸ் (Octopus). இவங்க ரெண்டு பேருக்கும் தான் யாரு பெரிய ஆளு இந்த தகவமைப்பிலன்னு தகராறு வருமாம், நம்ம அறிவியல் உலகத்திலுள்ள ஆராய்ச்சியாளர்களிடத்தே. நாம பின்னாடி ஒரு "நாட்டாமை ஸ்டைல்ல தீர்ப்ப கொடுத்திடுவோம்."
இந்த பூச்சி பார்ட்டிங்களுக்கு நம்ம கண்பார்வை மாதிரி இல்லாமல் "கூட்டுப் பார்வை"ன்னு (Compound Eyes) ஒரு தகவமைப்புங்க, அது எப்படின்ன எப்பாவது நீங்க ஒரு தட்டாம் பூச்சியவோ அல்லது வண்ணத்துப் பூச்சியவோ பிடிச்சு நல்ல கூர்ந்து கவனிச்சுப் பார்த்து இருந்திங்கன்னா தெரியும், கட்டம் கட்டமா (Facets) நிறைய அதன் கண்களிலிருப்பதை கவனிச்சுருக்கலாம்.


இந்த ஒவ்வொரு கட்டமும் தனித்தனியா வரும் பிம்பங்கள பிடிச்சு பிறகு அதுகளை மூளைக்கு அனுப்பி எல்லாத்தையும் ஒண்ணா போட்டு பார்க்குதாம். அதிலும் பாருங்க இதுகளுக்கு பெரும்பாலும் கிட்டப் பார்வை. அப்படிங்கும் பொழுது, இதுகள் பார்க்கும் விசயங்கள நாம மைக்ரோஸ்கோப்பில் வைச்சு பார்த்தாத்தான் அதுக பார்க்கிற டீடைல் நமக்கு கிடைக்குமாம்.
இப்பப் புரியுதா எப்படி அத்துனுண்டு பூவுக்குள்ள இருக்கிற (மகரந்த) சூலுக்குள்ள ச்சூசை கண்டுபிடிச்சு மூக்க நுழைச்சு எடுக்கிதுன்னு.
நிறைய பூச்சி வகைகள் நல்ல வண்ன நிறங்களையோ, பளிச்சின்னு அடிக்கிற வெளிச்சத்த பார்க்கிறமாதிரியோ, இல்லென்னா நிறக்குருடாகவும் இருக்குதுகளாம். ஏன் அப்படின்ன, உதாரணத்துக்கு வண்ணத்துப் பூச்சிகள், அதீதமான நிறங்களைத்தான் நம்பி இருக்குதாம். சாப்பாட்டுக்கு, பூக்களைத் தேர்ந்துதெடுப்பதற்கும் கலவி நண்பர்களை அடையாளம் காண்பதற்கும்.
அதோட கண்களின் நிற நிறமிகள் நம்ம கண்களுக்குள் இருப்பதை விட ரொம்ப அதி சக்தி வாய்ந்ததாம். அப்படின்னா, நம்மலைவிட அதிகமான நிறங்கள அவங்க உலகத்தில் பார்க்கிறாங்கன்னுதானே பொருள்?
தேனீக்களின் உலகத்தில எப்படிப்பான்னு கேளுங்க, அவங்களுக்கு வெறும் கண்களுக்கு புலப்படும் நிறங்களுக்குகெல்லாம் அப்பாற்பட்டு, புற ஊதாக்கதிர்களைக் (UV) கூட பார்க்கமுடியுதாம். இன்னொன்னையும் கேளுங்க இதுகளோட இடப்பெயர்ச்சிக்கு சூரியனிடமிருந்து வரும் போலாரைசிடு வெளிச்சத்தை (Polarized light) கொண்டு வார போற வழி தெரிஞ்சுக்கிட்டு பொயித்து வருதுங்களாம். எனக்கு மண்டை சுத்துதுங்க உங்களுக்கு எப்படியோ.
இப்ப கடைசிய நான் முன்ன சொன்ன ஆக்டோபஸ் கண்களப் பத்தியும் பாத்துவிட்டு நேர தீர்ப்புக்கு போயிடுவோம். இந்த ஆக்டோபஸ்ங்களோட கண்கள், நாம் கண்களிலிருந்து எவ்வாறு வித்தியாசப் படுகிறது என்பதனை கொண்டு இவரோட பரிணாமப் பரிசு எவ்வளவு அற்புதமின்னு தெரிஞ்சுக்கலாம்.

இப்ப நாம ஒரு ஃபிகர (object) பார்க்கிறோமின்ன நம்மளோட கண் தசைகள் சுருங்கி விரிஞ்சு இருக்கிற தூரம், கிடைக்கிற ஒளி இவைகளைக் கொண்டு அட்சஸ்ட் செஞ்சிகிட்டு பார்க்குது. ஆனா இவுக எப்படித் தெரியுமாவ, கேமர லென்ஸ் எப்படி முன்ன பின்ன போயி ஃபோகஸ் பண்ணுது அது மாதிரியே உள்ளே வெளியேன்னு பொயிட்டு பார்க்கிற விசயத்த பார்க்குதுகளாம்.
அப்படிப் பார்க்கப் போன நமக்கு பரிணாம மூலமா உடம்பில இருந்த முடி எல்லாம் உதிர்ந்ததைத் தவிர எதுவுமே நல்ல விசயம கொடுக்காம, இந்த நச்சு மண்டையை மட்டும் கொடுத்து எப்படி அடுத்த ஆளை கவுக்கிறதுன்னு ஐடிய பண்ணறது மாதிரி ஒரு மண்டையப் பரிசா கொடுத்து வைச்சிருக்கோ அப்படின்னு தோணுது.
இப்ப தீர்ப்பு நேரம்: அதுக ரெண்டும் சண்டை போட்டுகிதுகளா? எங்கள்ல யாருப்ப பெரிய ஆளுன்னு கேட்டுக்கிட்டு, அது அதுக உலகத்தில கிடைக்கிற, தேவைப்படுற விசயங்களுக்கு ஏர்த்தாப்ல உருப்புகள வாங்கிட்டு, தான் உண்டு தான் வேலை உண்டுன்னு இருக்குதுக, அதுகளுக்கிடையே விட்டா நாம ஒரு போரை மூட்டிவிட்டு ஆயுதங்களையும் வித்துப்புடுவோம் போல.