Monday, August 28, 2006

பூச்சிகளின் கண்களினுடே இவ்வுலகம்...!!!

இவ்வுலகில் தழைத்து ஓங்கும் எல்லா ஜீவராசிகளுக்கும், பரிணாமம், ஒவ்வொரு வகையிலும் தன்னிடமுள்ள அற்புதங்களை அள்ளி அள்ளி வழங்கியிருக்கிறது என்பதனை நமது கவனத்திலிருந்து தூரத்தில் இருக்கும் இந்த பூச்சிகளின் கண்களினுடே சொன்று நாம் பகிர்ந்து கொள்ளும் இந்த உலகம் எவ்வாறு அவைகளுக்குக் காணக் கிடைக்கிறது என்று பார்ப்போமா?

பூச்சிகளுக்கு மண்டை எங்க இருக்கு, உடம்பு எங்கேயிருந்து தொடங்குதுன்னு கண்டுபிடிக்கிறதே பெரிய விசயம், இதில அதுகளுக்கு மூளை இருக்குன்ன நம்புவோமா? அதிலும் இந்த ஜீவராசிகளின் உலகத்திலேயே, பூச்சிகளுக்குத்தான் சிறப்பு கண்கள் வழங்கப்பட்டிருக்கிறது என்றால், சொல்லவே வேண்டாம். நமக்கெல்லாம் ஆச்சர்யம் பீரிட்டு கிளம்ப.

Image Hosted by ImageShack.usஇப்ப ஒரு தட்டாம் பூச்சிய (Dragon Fly) எடுத்துக்குவோம், அவ்வளவு வேகமாக பறந்துகிட்டு பல அடி தூரத்தில பறந்து போயிகிட்டு இருக்கிற அதை விட சிறுசா இருக்கிற இன்னொருப் பூச்சிய எப்படிங்க லபக்கடீர்னு பிடிச்சு சாப்பிடுது. யோசிச்சா ஆச்சர்யமா இல்ல?

ஆனா, இந்த பூச்சிகளின் உலகமில்லாமல் இன்னொருத்தரும் இந்த சிறப்பு அமைப்பை பகிர்ந்துக்கிறார், அவருதான் கடல்ல வசிக்கிற ஆக்டோபஸ் (Octopus). இவங்க ரெண்டு பேருக்கும் தான் யாரு பெரிய ஆளு இந்த தகவமைப்பிலன்னு தகராறு வருமாம், நம்ம அறிவியல் உலகத்திலுள்ள ஆராய்ச்சியாளர்களிடத்தே. நாம பின்னாடி ஒரு "நாட்டாமை ஸ்டைல்ல தீர்ப்ப கொடுத்திடுவோம்."

இந்த பூச்சி பார்ட்டிங்களுக்கு நம்ம கண்பார்வை மாதிரி இல்லாமல் "கூட்டுப் பார்வை"ன்னு (Compound Eyes) ஒரு தகவமைப்புங்க, அது எப்படின்ன எப்பாவது நீங்க ஒரு தட்டாம் பூச்சியவோ அல்லது வண்ணத்துப் பூச்சியவோ பிடிச்சு நல்ல கூர்ந்து கவனிச்சுப் பார்த்து இருந்திங்கன்னா தெரியும், கட்டம் கட்டமா (Facets) நிறைய அதன் கண்களிலிருப்பதை கவனிச்சுருக்கலாம்.

Image Hosted by ImageShack.us Image Hosted by ImageShack.us

இந்த ஒவ்வொரு கட்டமும் தனித்தனியா வரும் பிம்பங்கள பிடிச்சு பிறகு அதுகளை மூளைக்கு அனுப்பி எல்லாத்தையும் ஒண்ணா போட்டு பார்க்குதாம். அதிலும் பாருங்க இதுகளுக்கு பெரும்பாலும் கிட்டப் பார்வை. அப்படிங்கும் பொழுது, இதுகள் பார்க்கும் விசயங்கள நாம மைக்ரோஸ்கோப்பில் வைச்சு பார்த்தாத்தான் அதுக பார்க்கிற டீடைல் நமக்கு கிடைக்குமாம்.

இப்பப் புரியுதா எப்படி அத்துனுண்டு பூவுக்குள்ள இருக்கிற (மகரந்த) சூலுக்குள்ள ச்சூசை கண்டுபிடிச்சு மூக்க நுழைச்சு எடுக்கிதுன்னு.

நிறைய பூச்சி வகைகள் நல்ல வண்ன நிறங்களையோ, பளிச்சின்னு அடிக்கிற வெளிச்சத்த பார்க்கிறமாதிரியோ, இல்லென்னா நிறக்குருடாகவும் இருக்குதுகளாம். ஏன் அப்படின்ன, உதாரணத்துக்கு வண்ணத்துப் பூச்சிகள், அதீதமான நிறங்களைத்தான் நம்பி இருக்குதாம். சாப்பாட்டுக்கு, பூக்களைத் தேர்ந்துதெடுப்பதற்கும் கலவி நண்பர்களை அடையாளம் காண்பதற்கும்.

அதோட கண்களின் நிற நிறமிகள் நம்ம கண்களுக்குள் இருப்பதை விட ரொம்ப அதி சக்தி வாய்ந்ததாம். அப்படின்னா, நம்மலைவிட அதிகமான நிறங்கள அவங்க உலகத்தில் பார்க்கிறாங்கன்னுதானே பொருள்?

தேனீக்களின் உலகத்தில எப்படிப்பான்னு கேளுங்க, அவங்களுக்கு வெறும் கண்களுக்கு புலப்படும் நிறங்களுக்குகெல்லாம் அப்பாற்பட்டு, புற ஊதாக்கதிர்களைக் (UV) கூட பார்க்கமுடியுதாம். இன்னொன்னையும் கேளுங்க இதுகளோட இடப்பெயர்ச்சிக்கு சூரியனிடமிருந்து வரும் போலாரைசிடு வெளிச்சத்தை (Polarized light) கொண்டு வார போற வழி தெரிஞ்சுக்கிட்டு பொயித்து வருதுங்களாம். எனக்கு மண்டை சுத்துதுங்க உங்களுக்கு எப்படியோ.

இப்ப கடைசிய நான் முன்ன சொன்ன ஆக்டோபஸ் கண்களப் பத்தியும் பாத்துவிட்டு நேர தீர்ப்புக்கு போயிடுவோம். இந்த ஆக்டோபஸ்ங்களோட கண்கள், நாம் கண்களிலிருந்து எவ்வாறு வித்தியாசப் படுகிறது என்பதனை கொண்டு இவரோட பரிணாமப் பரிசு எவ்வளவு அற்புதமின்னு தெரிஞ்சுக்கலாம்.

Image Hosted by ImageShack.us

இப்ப நாம ஒரு ஃபிகர (object) பார்க்கிறோமின்ன நம்மளோட கண் தசைகள் சுருங்கி விரிஞ்சு இருக்கிற தூரம், கிடைக்கிற ஒளி இவைகளைக் கொண்டு அட்சஸ்ட் செஞ்சிகிட்டு பார்க்குது. ஆனா இவுக எப்படித் தெரியுமாவ, கேமர லென்ஸ் எப்படி முன்ன பின்ன போயி ஃபோகஸ் பண்ணுது அது மாதிரியே உள்ளே வெளியேன்னு பொயிட்டு பார்க்கிற விசயத்த பார்க்குதுகளாம்.

அப்படிப் பார்க்கப் போன நமக்கு பரிணாம மூலமா உடம்பில இருந்த முடி எல்லாம் உதிர்ந்ததைத் தவிர எதுவுமே நல்ல விசயம கொடுக்காம, இந்த நச்சு மண்டையை மட்டும் கொடுத்து எப்படி அடுத்த ஆளை கவுக்கிறதுன்னு ஐடிய பண்ணறது மாதிரி ஒரு மண்டையப் பரிசா கொடுத்து வைச்சிருக்கோ அப்படின்னு தோணுது.

இப்ப தீர்ப்பு நேரம்: அதுக ரெண்டும் சண்டை போட்டுகிதுகளா? எங்கள்ல யாருப்ப பெரிய ஆளுன்னு கேட்டுக்கிட்டு, அது அதுக உலகத்தில கிடைக்கிற, தேவைப்படுற விசயங்களுக்கு ஏர்த்தாப்ல உருப்புகள வாங்கிட்டு, தான் உண்டு தான் வேலை உண்டுன்னு இருக்குதுக, அதுகளுக்கிடையே விட்டா நாம ஒரு போரை மூட்டிவிட்டு ஆயுதங்களையும் வித்துப்புடுவோம் போல.

Thursday, August 24, 2006

இழந்து தவிக்கும் சூரியக் குடும்பம்...!!!

வியாழக் கிழமை பொறந்ததும் பொறந்தது நம்ம சூரியக் குடும்பத்தில இருந்த ஒன்பது கோள்களில் ஒண்ணை (ப்ளூட்டோ) கிரகம் என்ற நிலையிலிருந்து இறக்கி "டுவாஃர்ப் ப்ளானட்" என்ற நிலைமைக்கு அண்மையில் Czech Republic (Prague) நாட்டில் நடந்த International Astronomical Union சந்திப்பில் வானவியல் விஞ்ஞானிகள் இதனை அதிகாரப் பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

சரிங்க என்னங்க நினைச்ச ஒரு கிரகத்த சேர்த்துக்கிறாங்க பிறகு ஏதாவது ஒரு காரணத்த சொல்லி அந்த நிலையில இருந்து இறக்கிக்கிறாங்க.

Image Hosted by ImageShack.us

எந்த அடிப்படையில இதனை செய்றாங்க, அப்படின்னு தேடினேன் கிடைச்சத உங்ககூட பகிர்ந்து கொள்ளலாமேன்னு தான் இந்த பதிவு. இப்ப என்னன்ன அடிப்படையில ஒரு ப்ளானட்டை ப்ளானட்டாவும் இல்லன்ன, இந்த மாதிரி டுவாஃப் ப்ளானட் அது இதுன்னு பேர் கொடுக்கிறாங்கன்னு பார்ப்போம்.

ஒரு கிரகமின்னு சொல்ல கீழ்கண்ட மூன்று அடிப்படை தகுதிகள் அந்த கிரகத்திற்கு இருக்கணுமாம்.

1) அந்த கிரகம் சூரியனை மையமாக வைச்சு சுத்தணுமாம்.

2) அந்த கிரகத்தின் அடர்வுத் தன்மையின் ஈர்ப்பு விசை அந்த கோளை வட்ட நிலைக்கு எடுத்து சென்றிருக்க வேண்டுமாம்.

3) அதன் அண்டைய வழியில் மத்த பொருட்கள் இதன் இருப்பை பாதிக்காத வண்ணம் வலியதாக இருக்கணுமாம்.

மேலே குறிப்பிட்ட மூன்றில் ஏதாவது இரண்டு ஒரு வானத்தில் சுற்றும் பொருளுக்கு (object) அமைந்தால் அது "டுவாஃர்ப் ப்ளானட்" என்றழைக்கப் படுகிறது.

அதற்காக நமது நிலவு ஏன் "டுவாஃர்ப் ப்ளானட்" நிலைக்கு அறிவிக்கப் படவில்லையென்றால், அது அப்படித்தானாம்.

சரி இந்த ப்ளூட்டோ கிரகத்தில நாம இறங்கின வுடனேயே அப்படியே உறைந்து போயிடுவோமாம், அவ்வளவு குளிர்ந்த நிலையில இருக்கிற ஒரு சுருங்கிப் போன கிரகமாம்.

இந்த ப்ளூட்டோ கிரகத்த வைச்சு நம்ம ஜாதகம்மெல்லாம் கணிப்பாங்களா, எனக்குத் தெரியல. அப்படி இந்த கிரகத்த கிரக நிலையில வைச்சு ஜாதகம் கணிச்சுருந்தா இப்ப அதுக்கெல்லாம் என்னவாகும்?

இப்படி இந்த கிரகத்த டி-பிரமோட் பண்ணதால நம்ம பள்ளிக்கூட நாட்களில் கடம் அடிச்சி வைச்சிருந்த ஒரு கிரகத்த மறக்கணும் இப்ப... நிறைய புத்தகங்கள்ல எழுதி வைச்சிருக்க அம் புட்டு விசயத்தையும் மாத்தணும். எம்புட்டு கவலை பாருங்க, நமக்கு.

Friday, August 11, 2006

புவியீர்ப்பு விசையை ஸ்தம்பிக்க செய்த சுனாமி...!

Image Hosted by ImageShack.us

2004ஆம் வருடம் டிசம்பர் மாதம் நடந்தேறிய இயற்கை சீற்றம் பூமியின் புவியீர்ப்பு விசையையே திருப்பிப் போட்டதாக அன்மைய ஆராய்ச்சிகள் கண்டறிந்து உறுதி செய்துள்ளன.

அவ்வாறு புவியீர்ப்பு விசையில் மாற்றம் காணும் பொழுது பூமிக்கு அப்பால் நிலை நிறுதப்பட்டுள்ள சாட்டிலைட்களின் பாதை கூட விலகியதாக அறியப்பட்டதாம்.

இந்த 9.1 ரிக்டர் அளவுகோலில் கடலுக்கு அடியில் நடந்த பூகம்பம் கடந்த நாற்பது வருடங்களில் இல்லாத அளவில் நடந்தேறியதாம். இதனால் சுமாத்ரா தீவுக்கருகில் உடனாடியாக புவியீர்ப்பு சக்தி குறைவு காணப்பட்டதாகவும் அறியப்பட்டுள்ளது.

இந்த பூகம்பம் எவ்வாறு பூவியீர்ப்பு விசையுடன் விளையாண்டிருக்க முடியும் என்பதனை இப்படியாக விளக்கியிருக்கிறார்கள். கடலுக்கு அடியில் பூகம்பத்தால் ஏற்பட்ட பிளவு ஆயிரம் கிலோமீட்டர் பரப்பளவை கொண்டதனால், பூமியின் மேல் ஓட்டில் உள்ள பாறைகளின் அடர்வு தன்மை குழைந்து புவியீர்ப்பு விசையுடன் சண்டை போட்டதாக தெரிகிறது.

இந்த புவியீர்ப்பு குறைவினாலோ அல்லது கூடுதாலலோ நமக்கென்ன ஆகாப்போகுது என்ற ஒரு கேள்வியை கேட்டு வைத்தால் அதற்கு விடை நமது உடம்பு எடையும் கூடலாம், குறையலாம் புவியீர்ப்பு விசையின் மாற்றத்தை பொருத்து (உதாரணமாக, இப்பொழுது நடந்த புவியீர்ப்பு சண்டையில் 150 பவுன்ட் உடைய ஒருவரின் உடல் எடை நமது எடையின் 25000த்தில் ஒரு அவுன்ஸ் குறைந்தாக அறியப்பட்டுள்ளது).

இது போன்ற புவியீர்ப்பு விசையின் மாற்றதினை முதன் முதலாக பூமிக்கு மேலிருந்து இந்த சுனாமியின் பொழுது மட்டுமே சாட்டிலைட்டுகளின் உதவி கொண்டு கவனித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Tuesday, August 08, 2006

பரிணாமச் சீர்கேடு ஒர் அறிமுகம்...

உலக மக்கள் தொகை ராக்கெட்டை விட அதி வேகமான முறையில் பயணித்து ஏழு பில்லியன்களையும் தாண்டி போய்க் கொண்டிருக்கும் பட்சத்தில் எப்படி இவர்கள் அனைவருக்கும் சாப்பாடு போடுவது என்று யோசிக்கும் கட்டாயத்தில் சில மனிதக் கடவுள்கள் கண்டுபிடித்த குறுக்கு வழிதான் இந்த "உயிரிய-தொழிற்புரட்சி (Bio-technology)" அணுகுமுறை.

இந்த வகை தொழிற்புரட்சி இயற்கை அன்னையின் அடிமடியில் கைவைப்பது என்றால் அது மிகையாகது. எப்படியெனில், உயிர்களின் அடிப்படை செல்களில் மாற்றங்களை திருடியோ அல்லது வைத்தோ அதன் பரிணாம சுழற்சியை கற்பிழக்க வைப்பதால்தான் இதற்கு "இயற்கையின் அடிமடி சுரண்டல்" இப்படி ஒரு பெயர் பொருந்தும் என்று கருதுகிறேன்.

இது போன்ற தொழிற் நுட்பத்திற்கு எந்த எல்லையும் கிடையாது, இது எப்படி காலப் போக்கில் பரிணமிக்கும் என்றும் அரிதியிட்டும் விளக்கிவிட முடியாது...

இதற்கு எனது இந்தப் பதிவில் நகைச்சுவையாக அளித்த சில பின்னூட்டங்கள் உண்மையாக நடக்கவும் வாய்ப்பு அதிகமே!

Thekkikattan said...

கேளுங்கள் ஆச்சர்யப் பட்டு போவீர்கள். இந்த மரபணு மாற்றுமுறை (selecting the desired genes) மனிதனில் ஆரம்பித்தால் கணினி மென்பொருள் வாங்குவது போல இரண்டு IQ சேர்த்து போட்டு நம்ம பொறக்கப் போற குழந்தைக்கு வாங்க பக்கத்து வீட்டு ராமன் கிட்ட 10000ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு போகலாம் :-)))

அறிவியல் பூர்வமாக பரிணாம வளர்ச்சி என்பது இயற்கையாகவே இருக்கும் சுற்றுப்புற தேவைகளுக்கென இயற்கையே தனது பயணத்தை நிர்ணயித்துக் கொள்ளும் ஒரு பாங்கு, அதில் அழகும், ஆச்சர்யமும் கலந்த கலவையே மிஞ்சி, அன்று வாழும் உயிர்களுக்கு வழங்குகின்ற ஒரு அற்புதச் செயல்.

இது போன்ற பரிணாம மாற்றங்கள் எதனால் நடந்தேறியது என்பதனை நாம் அரிதி கணக்கீட்டு சொல்ல முடிவதில்லை. அது இயற்கை சார்ந்த புரியா புதிர்களில் ஒன்று.

ஆனால் இன்றோ நாம் இந்த பரிணாம விந்தையை நம் கையில் எடுத்துக் கொண்டு இயற்கை கடவுளாக உயிர்களில் மாற்றங்களை கொண்டு சிருஷ்டிக்க ஆரம்பித்திருக்கிறோம். அம் மாற்றங்களின் பக்க விளைவுகளை முற்றிலுமே அறியாமலே, பிரஞையற்று, தன்னிச்சையாக.

நம் உணவில் கலந்து வரும் இந்த திருட்டு யுக்தி:

இது மூன்று வகையான தொழிற் நுட்பத்தின் மூலமாக சத்தமில்லாமல் பரிணாம மாசு படுத்தல் நடந்தேறுகிறது.

a) GE or GM (Genetically Engineered Food)

b) GMO (Genetically Modified Organism) and

c) TT (Terminator Technology)

a) Bovine Growth Hormone (BGH) என்ற வகை வளர்ச்சி ஹார்மோன்கள் Monsanto என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு சதாரணமாக ஒரு மாட்டில் சுரக்கும் பாலின் அளவீட்டை விட 15 சதவீதம் அதிகமாக பெற உட் செலுத்தப் படுகிறது. இது அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது ஆனால் ஐரோப்பா போன்ற கண்டங்களில் நடைமுறையில் இல்லை. இதன் பக்க விளைவுகளை கருத்தில் கொண்டு.

b) GMO இந்த வகை தொழில் நுட்பத்தில் மரபணுக்களில் மாற்றங்களை சொருகி, திருடி எடுத்துவிட்டு நடைமுறை படுத்தப் படுவதால் மனிதனுக்கும் பல வகையான வியாதிகள் புதிது புதிதாக முளைத்துக் கொண்டே இருப்பதோடு, பரிணாம மாசுபாடும் பிற்காலத்தில் பெரிய அளவில் நடந்தேறுகிறது... மீன்களில் எவ்வாறு இது போன்று நடைபெறுகிறது என்பதனை இங்கு பேசியிருக்கிறேன் முன்பே...

c) TT இதுவும் ஒரு Monsanto நிறுவன தயாரிப்பே இம்முறையில் தாவரங்களில் மரபணு மாற்றங்களை ஏற்படுத்தி அதிக மகசூலை பெருக்குவோம் என்ற போர்வையில், உலக விதைச் சந்தையை கையகப் படுத்தும் ஒரு குறுகிய கண்ணோட்டமே.

இந்த வகை அணுகுமுறையில் அவ்வாறு மாற்றமுரச் செய்யப்பட்ட பயிர்களிடமிருந்து கிடைத்த தானியங்களோ விதைகளோ, மறு பயிரிட்டுக்கு உதவுவதில்லை. வருடா வருடம் விவசாயிகள் விதைகளை பணம் கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இது போன்ற மரபணு மாற்றங்களை கொண்ட பயிர்கள் இயற்கைக்கு புறம்பான ஒர் உயிரினமே...

இது நமக்கும் தீங்கை விளைவித்து இயற்கைக்கும் புறம்பாக அமைகிறது. இன்று புதிதாக பரிணாமத்திருக்கும் புது வகை வியாதிகள் பரிணமித்த வைரஸ்களின் புது வகைகளால அல்லது இத் போன்ற குறுக்கு வழி வியாபார சுரண்டல்களால?
Related Posts with Thumbnails