அது மாதிரியான ஒரு ஆர்வமூட்டக் கூடிய வேலை இந்த பறவைங்க கவனிக்கிறதுன்னா மிகையாகாது. ஏன்னா, இந்தியாவில மட்டுமே 1250 வகையான பறவைகள் காணப்படுவதாகவும் அவைகளில் ஏறத்தாழ 920 வகையான பறவைகள் இங்கயே முட்டையிட்டு, இனப் பெருக்கம் செய்து வாழ்ந்து வருவதாகவும் அறியப்படுகிறது. நம்மூர்ல அதாவது தென் இந்தியாவில் (இலங்கை) 450 வகையான பறவைகளும், அவைகளில் மேற்கு மலைத் தொடர்களில் மட்டுமே காணப்படும் (endemic species) 35 வகையான அரிய பறவைகளும் இது வரையிலும் கண்டு பட்டியலிடப்பட்டிருக்கிறது.
பல முறை எனக்கு நேர்ந்தது எப்படின்னா குளக்கரைக்குப் போவேன், ஏதாவது ஒன்றிரண்டு சிறு பறவவைகள் வேலிகளில் தாவித் திரிவதை கண்டு அவைகளை தள கையேட்டில் உள்ள பறவைகளுடன் ஒப்பிட்டு அடையாளம் கண்டுவிட்டால் பெரு மகிழ்ச்சியோடு அன்றைய தினத்தில் மிதப்பேன். அப்படியாகத்தான் ஒரு நாள் அந்த நடையில் ஒரு பெரிய புது பறவை ஒன்றைக் காண நேர்ந்தது. என்னுடைய 21வது வயது வரைக்கும் இத்தனை பெரிய பறவை, இவ்வளவு எடுப்பான நிறத்துடன் என் கண்களில் சிக்காமல் நான் வாழ்ந்து வந்த ஊரிலேயே வாழ்ந்து வந்தது எப்படி எனக்குத் தெரியாமல் போனது என்று அதிசயமாக இன்று நினைக்கிறேன். ஆமாம். என்னாகிவிட்டது அந்த நடையின் பொழுது ஒரு காகத்தின் அளவிலிருந்த ஒரு பறவை வேலிகளுக்குள் ஒளிந்து மறைந்து தாவித் தாவி சென்றதை கவனித்து விட்டேன்.
நன்றாகப் பார்க்கும் பொழுது அது காகத்தினை விடப் பெரிதாக இருந்தது. மேலும், காகம் அப்படி கள்ளி வேலிகளில் புகுந்து சென்று கொண்டிருப்பதனை அந்த பறவைகள் கவனிப்பு நிலையில் நான் கண்டறிந்ததில்லை. இந் நிலையில், அப் பறவையின் பழக்கம் என்னை மேலும் ஆர்வமூட்டியது. கையில் பைனாகுலரைத் தவிர வேறு எதுவுமே இல்லை. கடைசியாக அந்தப் பறவை ஒரு முடிவிற்கு வந்ததாய் வெளிக் கிளம்பி சிறகெடுத்துப் பறந்து ஒரு 300 மீட்டரை கடந்து மீண்டும் அதே போன்றதொரு வேலிக்குள் புகுந்து கொண்டது.
ஆஹா! நான் ஏதோ ஒரு புது விதமான பறவையை கண்டுபிடித்து விட்டதாகவும், அது பெரிய அளவில் பேசப்பட்டு கையேட்டுப் புத்தங்களில் எனது பேருடன் வரப் போகிறதென்றும் மிக்க ஆவல் கொண்டவனாய் அடுத்த மணி நேரங்கள் அந்தப் பறவையின் பின்னாலே மிதந்துகிட்டே ஓடிக்கிட்டுருந்தது.

பறவைகள் கவனிப்பினை ஆரம்பித்து ஆர்வம் கிளம்பிவிட்ட தருணத்தில்,

ஒவ்வொரு வகையான பறவையும் எந்த விதமான சூழ்நிலையில் நான் கண்ணுற்றேன் என்று கூற வேண்டுமானால், அது மாதிரியான ஒவ்வொரு சிறப்பு பறவைக்கும் தனிப் பதிவாகவே பதிவிடலாம். அது போன்ற சுவாரசியமான நிகழ்வாக சில பறவைகள் எனக்கு வாய்ப்பை கொடுத்திருந்தது. அதுவும், மழைக்காடுகளில் பெரிய சேலஞ்ச்சாகவே அமையும் அவைகளின் சத்தத்தினை வைத்து திசையறிந்து, அமர்ந்திருக்கும் மரக் கிளையறிந்து அப்படியே நல்ல பார்வைக்கும் எட்டி... ம்ம்.
ஆரம்பக் காலங்களில் பைனாகுலர் பயன்படுத்துவதே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். பயன்படுத்தியவர்களுக்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்று விளங்கும். வெறும் கண்களால் ஒரு சிறு பறவையை கண்டுவிட்டு அந்த திசையை நோக்கி பைனாகுலர் கொண்டு பார்க்கிறேன் என்று வைத்துப் பார்த்தால் வேறு எங்காவது குளித்துக் கொண்டிருப்பவர்கள் தெரிவார்கள் [:-P]. சரியான இலக்கை நோக்கிப் பிடிக்க சில நாட்கள் அல்லது மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும் அந்தப் பழக்கத்தை நம்மதாக கொள்ள.
அடுத்து எப்படி ஒரு பறவையை கவனிக்க நேரும் பொழுது என்னன்னா விசயத்தை கவனிக்கணுங்கிறதை சொல்லிடுறேன். முதலில் நல்ல கண்பார்வை. அதாவது அட்டெண்டிவ்வாக பார்க்கும் மன நிலை. பொதுவாக பறவைகள் இலைகளுக்குள் அமர்ந்திருக்கும் பட்சத்தில் எப்பொழுது அவை அசைகிறதோ அதனைக் கொண்டு பறவையின் இருப்பை அறிய முடியுமல்லவா? எனவே, பொறுமையாக கூர்ந்து பார்க்கும் ஒரு ஆர்வம் வேண்டும். அப்படி இருக்குமிடம் அறிந்து கொண்டால் ஆர்வத்தில் அடுத்தவரை அழைக்கிறேன் என்று கூச்சல் இடுவது ஒரு கல்லை எடுத்து எறிவதற்கு ஒப்பானது என்பதால், அதனை கண்டிப்பாக தவிர்த்து, ஹஸ் குரலில் விசயத்தை பெரிய அளவு உடம்பு அசைவுகளற்ற முறையில் வெளிப்படுத்துவது அவசியம். எல்லாம் அனுபவம் கற்றுக் கொடுப்பதுதான்.

இது போன்ற பொதுவான பண்புகளைக் கொண்டு ஓரளவிற்கு அது எந்த விதமான பறவையாக இருக்கக் கூடும் என்று அனுமானிக்கும் அனுபவத்தை பெற்றுவிடுவோம். இரண்டாவது, நமக்கு மிகவும் பார்த்து பழக்கப் பட்ட ஒரு பொதுவான பறவை உடலைப்பு, அதன் நீளம், எடை இவைகளை கருத்தில் கொண்டு அந்தப் பறவையுடன் பார்த்த பறவையை குறிப்பிட்டு குறித்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, நம்ம சிட்டுக் குருவி எல்லாருக்கும் பார்க்கக் கிடைத்திருக்கும் ஒரு பறவை, அதே போன்றே உடல் பருமனுடன் வயல் வெளியில் பிப்பிட், ஸ்கைலார்க் வகை பறவையை காண நேரிட்டிருந்தால், குறிப்பு புத்தகத்தில் சிட்டுக் குருவி அளவு, பிறகு எது போன்ற அடையாளங்கள் மிகவும் கவனிக்கத் தக்க வகையில் தென் பட்டதோ, அவைகளை எல்லாம் நன்றாக கவனித்து குறித்துக் கொள்ள வேண்டும்.
இறக்கையின் நிறம், கண்களைச் சுற்றி ஏதாவது வட்டம், நிறம் இருந்ததா,

இப்படியே நீங்களும் இதுல ஈடுபட்டுப் பாருங்களேன். எந்த ஊருக்குப் போனாலும் இதனை ஒரு ஹாபியாக வைத்துக் கொண்டால் அந்த ஊரு மனிதர்கள் அன்னியப் பட்டுப் போனாலும் இவைகளுடன் ஒரு வித நெருக்கத்தை உணர முடியும். மேலும், தினமும் ஒரு பறவையென உங்க சொந்தப் பட்டியலும் நீண்டு கொண்டே செல்லும். தேவை ஆர்வம் அதனையே பழக்கமாக்கிக் கொள்வது வரைக்கும். குழந்தைகளை ஆரம்ப கால கட்டத்திலேயே ஆர்வத்தை வளர்த்து விட்டால், கோடை காலத்தில் தொலைக்காட்சி பெட்டிக்கு முன்னால் செலவு பண்ணும் நேரத்தை மிச்சப் படுத்தி இது போன்ற ஆரோக்கியமான விசயங்களை கற்றுக் கொண்டவர்களாவார்கள். முயற்சி பண்ணிப்பாருங்களேன்!