இதுக்கென்ன காரணமாக இருக்கலாம், அப்படின்னு கொஞ்சம் லாஜிக்கா யோசிச்சுப் பார்த்தா ஒரு விசயம் டக்கின்னு உதயமானுச்சு... இது எங்க வச்சுன்னா, ஒரு முறை நாங்க கலக்காடு-முன்டந்துரையில விலங்குகள் கணக்கீட்டுக்காக போயிருந்தப்ப எங்களுக்கு உதயமானது.

எனக்கு ஒதுக்கப்பட்ட இடம் வந்து செங்கல்தேரிங்கிற இடங்க. சூப்பரான லொகேஷங்க...! ஒரு நாள் சுத்தமா எடுத்துகிச்சு ஸ்ரீவில்லிப்புத்தூர்ல இருந்து செங்கல்தேரி போயி அங்கிருந்து ட்ரெக்கிங் ட்ரெக்கிங்தான், மழைக்காடுகளிடத்தே புகுந்து. போற வழியெங்கும் புலியோட பாதச் சுவடுகள் தெளிவா கிடைக்கிற எடத்தில பிளாஸ்டோ பாரிஸ் கரைச்சு ஊத்தி அப்படியே அலக்கா பேர்த்து வைச்சுக்கணும், பின்னால கணக்குப் போட்டு எத்தனை புலிகள் அந்த காட்டுக்குள்ள இருக்கலாம் அப்படின்னு தோராயம கணக்கு போட ஏதுவா இருக்குமின்னு.
அப்படிப் போகும் போதுதான், அந்த மலைகளின் கம்பீரமும், அழகும் பிடிபட ஆரம்பித்தது. மப்பும் மந்தாரமும் 2000 அடிக்கும் மேல உயரத்தில நின்னுகிட்டு கீழே விரித்துப் போட்ட ஜமுக்காளம் போல ஏற்ற இறக்கமாக உருண்டு கிடக்கும் மலைகளின் அழக ஆயிரம் கண்கள் கொண்டு பார்த்தாலும் முழுமையாக பருகிவிட முடியாதுங்க. அவ்ளோ அழகு!
அங்குதான் நான் சொன்ன மாதிரி அந்த மரங்களின் உயரத்திற்கு லாஜிக்கலா விடை கிடைத்தது. அப்படி சரிவா பள்ளத்தாக்குகளில் இருக்க கூடிய மரங்களுக்கு விடிந்து ரொம்ப நேரம் ஆகியும் சூரிய ஒளி கிடைக்கிறதில்ல ஏன் அப்படின்னா, மேட்டுப் பகுதியில இருந்து சூரியன் மீண்டு உயர வரதுக்குள்ள பள்ளத்துல இருக்கிறவங்க எல்லாம் ரொம்ப பொறுமையா இருக்கணும், இல்லையா?
அப்படி இருந்தாலும் அவைகளுக்கும் சூரிய ஒளி ரொம்ப அவசியமில்லையா, அதினால அவைகளும முட்டி மோதி முதல் சூரிய ஒளியை பெறுவதற்கு எவ்வி வளர வேண்டியிருக்கு. அதுவும் ஒரு காரணம் ஏன் அந்த மாதிரி, மழைக் காடுகளில் இருக்கிற மரங்கள் ரொம்ப உயரமா இருக்கு அப்படிங்கிறத்துக்கு.

அப்படியிருக்கையில் மழைவேற சும்மா தொண தொணன்னு பேஞ்சுகிட்டே இருக்குமா, எனவே இருக்கிற இடத்துக்குள்ள நம்ம நெடுக வளர்ந்தவனுங்க ஸ்ட்ராங்க தரைய பிடிச்சிகிட்டு, நல்ல சத்தும் சப்ளை பண்ணிக்கிட்டு இருக்கணும். இந்த சூழ்நிலையில்தான், இந்த நெடுக வளர்ந்ததுங்க பரிணாமத்த துணைக்கு கூப்புட்டுகிதுங்க எப்படின்னும் பார்ப்போம் இப்ப.
தரையில நல்லா ஊன்றி நிக்கறதுக்காக அதோட அடிப்பகுதியை ஒரு ராக்கெட்டெ செங்குத்தா நிக்கவைச்சா எப்படி இருக்கும், ராக்கெட் இறக்கைகள் தரையோட நல்ல அகலமா இருக்குமில்லே, அது போலவே இந்த நெடும் பசங்கள ஊன்றிப் பிடிச்சிக்கிறத்துக்காக அதே மாதிரியே நல்ல அகலமா மரத் தோட அடிப்பகுதியாகிடுது. இது மாதிரி எல்லா மரங்களும் இருப்பதில்லை, ஒரு சில ஆட்கள் மட்டுமே இந்த ட்ரிக்க பயன்படுத்துறாங்க.
இப்படி இருக்கிறதாலே நிறைய நல்ல விசயங்கள் அந்த நெடும் பசங்களுக்கு கிடைக்கிது. ஒண்ணு, நிறைய மழை பெய்யும் பொழுது மண் அரிப்புனால சாஞ்சுட மாட்டானுங்க. இரண்டு, காஞ்ச சருகு இதெல்லாம் பிடிச்சு வைசுக்கலாம், அப்படி வச்சுக்கும் போது அந்த சருகெல்லாம் மச்சு திரும்ப தனக்கே உரமா வந்திடுமில்லையா, அதான்.
என்ன ட்ரிக் பாருங்க. இந்த பசங்களுக்கு. நாமெல்லாம் நினைக்கிறோம் என்ன மரம் தானேன்னு, ஆனா, இவனுகூட யோசிச்சு தனக்கு வேணுங்கிறதை கேட்டு காலப் போக்கில வாங்கிக்கிறாங்க நம்மை போலவே. ஆனா, என்ன கொஞ்சம் சத்தமில்லாம இங்கே வேலை நடக்குது, அவ்ளோதான் வித்தியாசம்.
ஒரு மரத்த நாங்க டேப் வச்சு சுத்தி பிடிச்சோம் பாருங்க 10 மீட்டரை சாதாரணமா சுத்திக்கிச்சு தன்னைச் சுத்தி. அப்படின்னா எவ்ளோ பெரிய மரம் பாருங்க!
சரிங்க, மரத்தப் பத்தி பேசிகிட்டு இருக்கோம் இன்ன ஒண்ணும் சொல்லிப்புடறேன். ஒரு நாள் அவ்ளோ பெரிசா இருக்கேன்னு, தரையில படுத்துகிட்டு பார்த்தா எப்படி இருக்குன்னு மல்லாக்க படுத்திட்டு பார்தேங்க, ரொம்ப ஆச்சிரியமா இருந்துச்சு ஒரு மரப்பைய இன்னொரு பக்கத்தில நிக்கிற பையனோட கிளைகளோட முட்டிக்காம உரசிக்காம அழக வரைஞ்சு வச்ச மாதிரி ஒரு இரண்டு அடி இடம் விட்டு கிளை பரப்பி நிக்கிதுங்க (நான் சொல்றது மர நுனியைப் பத்தி - Canopy).
அவ்ளோ அண்டர்ஸ்டண்டிங் ஒருத்தருக்கொருத்தர். ஆச்சர்யம் தானே!? ஏனுங்க அதுகளுகெல்லாம் மதப் பிரட்சினை மாதிரி ஏதாவது இருக்குதாங்க?