Showing posts with label Global Warming. Show all posts
Showing posts with label Global Warming. Show all posts

Thursday, June 22, 2006

400 வருடங்களில் இல்லாத வெப்ப சூடேற்றம்...


கடந்த 400 வருடங்களில் இல்லாத அளவிற்கு பூமிச் சூடேற்றம் நிகழ்ந்து வருவதாக வாஷிங்டனில் உள்ள "தேசிய ஆராய்ச்சி கழகம்" ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.



இவ் அறிக்கையில் கடந்த 20ஆம் நூற்றாண்டு வாக்கில் மட்டும் ஒரு டிகிரி ஃபாரன்கெய்ட் வெப்பம் அதிகரித்து இருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.

மேலும் இந்த பூமிப் பந்தின் சுர அதிகரிப்பு, அதிகரித்து வரும் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றம், கார்கள் மற்றும் தொழிற் சாலைகள் மூலமுமே என்றும் அவ் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

Tuesday, June 13, 2006

*குளோபல் சூடேற்றம்* - காட்டிக்கொடுக்கும் தவளைகள்...

பூமிப் பந்தின் சூடேற்றம் குறித்து ஏற்கனவே நான் இரண்டு பதிவுகள் *குளோபல் வார்மிங்* - உண்மையா கற்பனையா? வெளிகண்ட நாதரின் உஷ்ணமாகும் உலகம் - எப்படி குளிர்விக்கலாம்? என்பதிலும் விளக்கியுள்ளோம். அதனைப் பற்றி படித்தறிந்தால் இப்பொழுது அதனை உறுதிப் படுத்தும் வண்ணம் எவ்வாறு தவளைகளும், தேரைகளும் தன் உயிரை மாய்த்து நடப்பதை நமக்கு உண்மையே என்று உறுதி செய்து வருகிறது என்பதனை அறிந்து கொள்ளலாம்.

அண்மையில் நடந்த ஆராய்ச்சியின் பொருத்து 'இயற்கை' எனும் ஜார்னலில் இது பற்றிய உண்மை வெளியாகி உள்ளது.

கடந்த 25 வருடங்களில் 168-க்கும் மேற்பட்ட தவளை இனங்கள் உலகம் தழுவிய முறையில் அடியோடு கபளீகரமானதாக (சுத்தமாக பூமியை விட்டே) அறியப் பட்டுள்ளது.

இதற்கு என்ன காரணமாக இருக்கலாம்மென்று உற்று பார்க்கும் பொழுது சீதோஷண நிலையில் ஏற்படும் மாற்றம் அதனை தொடர்ந்து ஏற்படும் தொடர் வறட்சி அல்லது வெள்ளம் இவைகள்தான் முக்கிய பங்கு வகிப்பதாக அறியப்பட்டுள்ளது. இது இப்படியாக இருக்கையில் ஆராய்சியாளர்கள் வெப்ப ஏற்றதிற்கும் அத் தவளைகளின் மறைவிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை புள்ளியீட்டு கணக்கின் படி உறுதி செய்துள்ளனர்.

அத் தொடர்பு பற்றிய ஆய்வு மத்திய மற்றும் தென் அமெரிக்கா காடுகளில் நடத்தி கண்டறியப்பட்டுள்ளது. அவ் ஆய்வின் படி கிட்டதட்ட 65 இனத் தவளைகள் நிரந்தரமாக காணவில்லை அவ் வனங்களிலிருந்து என சுட்டுகிறது.

சரி இப்பொழுது ஏன் தவளைகளை மட்டும் இந்த வெப்பச் சூடேற்றம் உடனடியாக பாதிக்கிறது அப்படின்னு கொஞ்சம் பார்க்கலாம். நம்ம எல்லோருக்குமே தெரியும் நில நீர் வாழ்வனவான (amphibians) அத் தவளைகளின் தோல் மிகவும் மென்மையானது. அதனால் எதும் மிக எளிதாக (Permeable) ஊடுருவும் வாய்ப்புகள் அதிகம். உ.த: நாம் வயலில் அடிக்கும் சில வகை பூச்சி கொல்லிகள் அல்லது உரங்கள் கூட அவைகளின் தோல்களின் வழியே சென்று அவைகளை கொன்று விட முடியுமுன்னா பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த வெப்ப சூடேற்றம் அவைகளை நேரடியா பாதிக்கிறதுமில்லாம, காஸ்டா ரிகா எனும் மத்திய அமெரிக்கா நாட்டு காடுகளில் ஒரு வித பூஞ்சைகாளான்கள் (Chytrid) அதீதமாக பல்கி பெருக வழி வாகை செய்து விடுகிறதாம். இந்த பூஞ்சைகள் என்ன பண்ணுதுன்னா, தவளைகளின் மீது தொத்தி அவைகளின் தோல் துவாரங்களை அடைத்துவிடுவதால, தண்ணீர் சமநிலை சீர்கெட்டு தவளைகள் மாண்டு விடுகின்றனவாம்.

இது வரைக்கும் இத்த தொத்து வியாதிக்கு நான்கு மாதத்திலேயே சுமார் நான்கு இனத் தவளைகள் மாண்டு இவ்வுலகை விட்டே சுத்தமாக (extinct) அழிந்து போனதாக கண்டறியப்பட்டுள்ளது.

இது இப்படியாக இருக்க நம்மூரு காடுகளில் இன்னும் எத்தனை இனத் தவளைகள் இருக்கிறது என்பதனை கண்டுபிடிக்காத பட்சத்தில், எங்கங்கோ நாம் உலக வெப்ப சூடேற்றதிற்கு அவைகளை நொடிக்கு ஒன்றாக இழந்து வருகிறோம் என்று தெரிந்து கொள்ளும் கணம்தோரும் - நிறைய பசங்கள நாம நம்மூர்ல கண்ணாலே பார்க்காமலேயே காவு கொடுக்கிறோமோ என்று நினைக்கும் பொழுதும்... இதற்கெல்லாம் என்னதான் தீர்வு அப்படின்னு கேட்கத் தோணுது.
Related Posts with Thumbnails