Showing posts with label Plants. Show all posts
Showing posts with label Plants. Show all posts

Thursday, May 11, 2006

இப்படியும் நிப்பேனே...: Buttressed Trees...!

அதிகமாக மழை பெறும் மலைப் பிரதேசங்களில் உள்ள மரங்கள் நல்ல நெடுக வளர்ந்தானாக நெடு நெடுன்னு நல்ல உயரமாக ஒரு 50 அல்லது 60 அடி உயரத்திற்கே கூட வளர்ந்துவிடலாம்.

இதுக்கென்ன காரணமாக இருக்கலாம், அப்படின்னு கொஞ்சம் லாஜிக்கா யோசிச்சுப் பார்த்தா ஒரு விசயம் டக்கின்னு உதயமானுச்சு... இது எங்க வச்சுன்னா, ஒரு முறை நாங்க கலக்காடு-முன்டந்துரையில விலங்குகள் கணக்கீட்டுக்காக போயிருந்தப்ப எங்களுக்கு உதயமானது.

Western Ghats_Rainforest

எனக்கு ஒதுக்கப்பட்ட இடம் வந்து செங்கல்தேரிங்கிற இடங்க. சூப்பரான லொகேஷங்க...! ஒரு நாள் சுத்தமா எடுத்துகிச்சு ஸ்ரீவில்லிப்புத்தூர்ல இருந்து செங்கல்தேரி போயி அங்கிருந்து ட்ரெக்கிங் ட்ரெக்கிங்தான், மழைக்காடுகளிடத்தே புகுந்து. போற வழியெங்கும் புலியோட பாதச் சுவடுகள் தெளிவா கிடைக்கிற எடத்தில பிளாஸ்டோ பாரிஸ் கரைச்சு ஊத்தி அப்படியே அலக்கா பேர்த்து வைச்சுக்கணும், பின்னால கணக்குப் போட்டு எத்தனை புலிகள் அந்த காட்டுக்குள்ள இருக்கலாம் அப்படின்னு தோராயம கணக்கு போட ஏதுவா இருக்குமின்னு.

அப்படிப் போகும் போதுதான், அந்த மலைகளின் கம்பீரமும், அழகும் பிடிபட ஆரம்பித்தது. மப்பும் மந்தாரமும் 2000 அடிக்கும் மேல உயரத்தில நின்னுகிட்டு கீழே விரித்துப் போட்ட ஜமுக்காளம் போல ஏற்ற இறக்கமாக உருண்டு கிடக்கும் மலைகளின் அழக ஆயிரம் கண்கள் கொண்டு பார்த்தாலும் முழுமையாக பருகிவிட முடியாதுங்க. அவ்ளோ அழகு!

அங்குதான் நான் சொன்ன மாதிரி அந்த மரங்களின் உயரத்திற்கு லாஜிக்கலா விடை கிடைத்தது. அப்படி சரிவா பள்ளத்தாக்குகளில் இருக்க கூடிய மரங்களுக்கு விடிந்து ரொம்ப நேரம் ஆகியும் சூரிய ஒளி கிடைக்கிறதில்ல ஏன் அப்படின்னா, மேட்டுப் பகுதியில இருந்து சூரியன் மீண்டு உயர வரதுக்குள்ள பள்ளத்துல இருக்கிறவங்க எல்லாம் ரொம்ப பொறுமையா இருக்கணும், இல்லையா?

அப்படி இருந்தாலும் அவைகளுக்கும் சூரிய ஒளி ரொம்ப அவசியமில்லையா, அதினால அவைகளும முட்டி மோதி முதல் சூரிய ஒளியை பெறுவதற்கு எவ்வி வளர வேண்டியிருக்கு. அதுவும் ஒரு காரணம் ஏன் அந்த மாதிரி, மழைக் காடுகளில் இருக்கிற மரங்கள் ரொம்ப உயரமா இருக்கு அப்படிங்கிறத்துக்கு.

அப்படி உயரமா வளர்ந்த அந்த நெடுக வளர்ந்தவனை யாரு தரையில தாங்கி இருப்பான்னு பிடிச்சுக்கிறது, வேருகள்தானே? ஏற்கெனவே, மழைக்காடுகள் உள்ளே போயி பார்த்தோம்னா ரொம்ப அடர்த்தியா இருக்கும்; நிறைய சின்னதும் பெரிசுமா செடிகளும், மரங்களும், கொடிகளுமா...

அப்படியிருக்கையில் மழைவேற சும்மா தொண தொணன்னு பேஞ்சுகிட்டே இருக்குமா, எனவே இருக்கிற இடத்துக்குள்ள நம்ம நெடுக வளர்ந்தவனுங்க ஸ்ட்ராங்க தரைய பிடிச்சிகிட்டு, நல்ல சத்தும் சப்ளை பண்ணிக்கிட்டு இருக்கணும். இந்த சூழ்நிலையில்தான், இந்த நெடுக வளர்ந்ததுங்க பரிணாமத்த துணைக்கு கூப்புட்டுகிதுங்க எப்படின்னும் பார்ப்போம் இப்ப.

தரையில நல்லா ஊன்றி நிக்கறதுக்காக அதோட அடிப்பகுதியை ஒரு ராக்கெட்டெ செங்குத்தா நிக்கவைச்சா எப்படி இருக்கும், ராக்கெட் இறக்கைகள் தரையோட நல்ல அகலமா இருக்குமில்லே, அது போலவே இந்த நெடும் பசங்கள ஊன்றிப் பிடிச்சிக்கிறத்துக்காக அதே மாதிரியே நல்ல அகலமா மரத் தோட அடிப்பகுதியாகிடுது. இது மாதிரி எல்லா மரங்களும் இருப்பதில்லை, ஒரு சில ஆட்கள் மட்டுமே இந்த ட்ரிக்க பயன்படுத்துறாங்க.

இப்படி இருக்கிறதாலே நிறைய நல்ல விசயங்கள் அந்த நெடும் பசங்களுக்கு கிடைக்கிது. ஒண்ணு, நிறைய மழை பெய்யும் பொழுது மண் அரிப்புனால சாஞ்சுட மாட்டானுங்க. இரண்டு, காஞ்ச சருகு இதெல்லாம் பிடிச்சு வைசுக்கலாம், அப்படி வச்சுக்கும் போது அந்த சருகெல்லாம் மச்சு திரும்ப தனக்கே உரமா வந்திடுமில்லையா, அதான்.

என்ன ட்ரிக் பாருங்க. இந்த பசங்களுக்கு. நாமெல்லாம் நினைக்கிறோம் என்ன மரம் தானேன்னு, ஆனா, இவனுகூட யோசிச்சு தனக்கு வேணுங்கிறதை கேட்டு காலப் போக்கில வாங்கிக்கிறாங்க நம்மை போலவே. ஆனா, என்ன கொஞ்சம் சத்தமில்லாம இங்கே வேலை நடக்குது, அவ்ளோதான் வித்தியாசம்.

ஒரு மரத்த நாங்க டேப் வச்சு சுத்தி பிடிச்சோம் பாருங்க 10 மீட்டரை சாதாரணமா சுத்திக்கிச்சு தன்னைச் சுத்தி. அப்படின்னா எவ்ளோ பெரிய மரம் பாருங்க!

சரிங்க, மரத்தப் பத்தி பேசிகிட்டு இருக்கோம் இன்ன ஒண்ணும் சொல்லிப்புடறேன். ஒரு நாள் அவ்ளோ பெரிசா இருக்கேன்னு, தரையில படுத்துகிட்டு பார்த்தா எப்படி இருக்குன்னு மல்லாக்க படுத்திட்டு பார்தேங்க, ரொம்ப ஆச்சிரியமா இருந்துச்சு ஒரு மரப்பைய இன்னொரு பக்கத்தில நிக்கிற பையனோட கிளைகளோட முட்டிக்காம உரசிக்காம அழக வரைஞ்சு வச்ச மாதிரி ஒரு இரண்டு அடி இடம் விட்டு கிளை பரப்பி நிக்கிதுங்க (நான் சொல்றது மர நுனியைப் பத்தி - Canopy).

அவ்ளோ அண்டர்ஸ்டண்டிங் ஒருத்தருக்கொருத்தர். ஆச்சர்யம் தானே!? ஏனுங்க அதுகளுகெல்லாம் மதப் பிரட்சினை மாதிரி ஏதாவது இருக்குதாங்க?

Tuesday, May 02, 2006

சாப்பிடலாம் வாங்க..! : காலிஃப்ளோரி (Cauliflory)

ஹும்ம்...நான் ஒரு பலாப் பழ ரசிகன் (jack fruit-யாருப்பா இப்படி ஒரு பேர வச்சது) ! ஒரு முறை நாங்க ஒரு கோடை விடுமுறையப்ப என்ன செய்தோமுன்னு முதல்ல சீரியாச விசயத்துக்குள்ள நுழையறத்துக்குள்ள நாம டைம் ட்ராவல் பின்னோக்கி பயணிச்சு ஒரு 15 வருடங்கள், போயிட்டு வந்துருவோம், சரியா. எல்லோரும் சீட் பெல்ட் போட்டாச்சா...ரெடியா இருந்தாலும் சரி, இல்லென்னாலும் சரி...வண்டி ஆன் த மூவ்...

நாங்க ஒரு நாலு பேருங்க இரண்டு மிதி வண்டிய வாடகைக்கு எடுத்துகிட்டு எங்களோட இன்னொரு பள்ளிகூட நண்பரின் வீட்டுக்குப் போயி அவனோட சேர்ந்து அவங்க தோட்டத்துக்கு போரதா திட்டம். அங்க போனவுடன், எங்ககிட்ட இருந்த பைசாவெல்லாம் ஒண்ணா சேர்த்தோம் ஒரு 15-20 ரூபாய்க்குள் தேறிச்சு. எங்களோட நண்பரின் அப்பா அந்த பலாப் பழம் விக்கிற தொழில்தான் பண்றாருன்னு தெரியும். அதாம் நாங்க ஈ மாட்டம் அந்த நண்பருக்கிட்ட ஒட்டிகிட்டோம். நண்பரின் அப்பாவும் ஒரு அருவா, கோணிப்பை சகிதமா கூடவே வந்தாரு.

அந்த மரம் நல்ல அடர்த்தியா பச்சை பசேல்னு நிறைய கிளைகளோட அடி மரத்தில ஆரம்பிச்சு ஒவ்வொரு கிளை உடம்புலேயும் பலா... பலாதான்... நம்ம தலைவரு ஒரு ஆறு அடி ஏறி இருப்பாரு, என்னமோ ஏற்கெனவே பார்த்து வைச்சமாதிரி, ஒரு பழத்தை தட்டி பார்த்தாரு, படக்குன்னு இடுப்புல சொருகி இருந்த அருவாள எடுத்து காம்புல நங்குன்னு ஒரு போடு போட்டு, பழத்தையும் பிடிச்சுகிட்டுதான், எங்கள கூப்பிட்டாரு "பசங்களா அந்த கோணிப்பை இங்கன கொண்டு வந்து பிடிச்சுக்கங்கட" அப்படின்னார். நாங்களும் அவருக்கு நேர் கீழே நின்னுகிட்டு நம்மூருல 'கிரிக்கேட்டு' விளையாடுவாங்களே கையில பந்தை லாபகமா அடிச்சு கொடுத்தா, குட்டு கேச்சுன்னு கத்திக்கிட்டு ஓடுவாங்கள்ள அது மாதிரியே, சும்மா நாலு அடி உயரத்தில இருந்து நேரா சாக்குக்கு இறக்கின பழத்தை பிடிச்சுட்டோம்.

அப்புறம்மென்ன, அப்பா வெட்டி கொடுக்க நாங்க எல்லா நாட்டியமும் ஆடிக்கிட்டே ஒரு முழுப் பழத்தையும் திண்ணுப்புட்டு அங்கே படுத்து உருண்டு வயித்தோட சைஸ்சயும் குறைச்கிட்டு சாயந்திரமா கெளம்பி வீடு வந்தோம். ஆனா, அன்னிக்கு எனக்கு ஒரு கேள்வி வந்துச்சு ஏன் பலா மரம் மத்த மரங்கள் மாதிரி இலைக் காம்புகளிடத்தேயும், மற்ற சிறு கிளைகள்ளேயும் காய்க்கிறது இல்ல அப்படின்னு, பின்னாளில் நான் மலைக் காடுகளில் அலைஞ்சப்பவும், பார்த்தும், படிச்சும் தெரிஞ்சு கிட்டத உங்க கிட்டயும் பதிலா பகிர்ந்துக்க போறேன்.

கொஞ்சம் இந்த கட்டுரையோட நீளம் அதிகமாக போச்சு. நம்ம கதையைப் பத்தி சொல்லப் போக... அதுவும் ஒரு காரணமாத்தான் சொன்னென். இந்த காலத்துப் பசங்க எங்க டி.வி_யையும், கேம் மிசினையும் விட்டு கண்ணெ எடுக்கிறாய்ங்க... அவனுகளுக்காகத்தான் அது! சரி, நாம நம்ம வேலையை பார்ப்போம்.

இந்த மாதிரி மழைக் காடுகளில் நிறைய இன மர வகைகள் அடிமரத்தில பூ பூத்து, பழமிடும் பழக்கமுள்ளதாக இருக்கிறது. பை த வே, ஒரு, சிறு செய்தி, பலா மரமும் ஒரு மழைக்காட்டு மர வகைதான். ஊட்டி, கொடைக்கானல் பஸ்ல பயணிச்சுருந்தா பார்த்தீருப்பீர்களே. இந்த மாதிரி பழக்கமுள்ள முறைக்கு தாவரவியல்ல காலிஃப்ளோரி (Cauliflory) அப்படின்னு சொல்றோம். சரி, இதுனால என்ன பயன் அப்படிங்கிறது நம்மோட இரண்டாவது கேள்வி. இந்த வகை மரங்கள் சில ஆண்டுகள் பூவே பூக்காமலும் இருக்கலாம், இல்ல சுத்தமா காயே காய்க்காமலும் இருக்கலாம். அதாவது நம்ம ஊரு ஸ்டைல்ல சொல்லனுமின்னா "வச்சா குடுமி, செரைச்சா மொட்டை."

அப்படி காய்க்கிற சமயத்தில (திடீர்னு எப்பயாவது ஒரு சீசன்ல மட்டும்), இதோட இனப் பரவல் (seed dispersal) பழமுண்ணும் விலங்குகள் மூலமாத்தான் நடக்குது அப்படின்னும் ஒண்ணு இருக்கில்ல அதையும் பார்க்கணுமில்ல, அது அப்படி இருக்கும் போது, இந்த பழங்களோட காம்பு வேற ரொம்ப ஸ்ராங்கா இருக்குதா ரொம்ப உயரத்திலிருந்து நல்லா பழுத்திருந்தாலும் பொத்னு கீழேயும் விழுகாது. அப்படியே அங்கேயே இருந்து அழுகி போக வேண்டியதுதான்.

இதெல்லாம் பார்த்துபுட்டு, நம்மாளுங்க பரிணாமத்தை கைப்புடியா பிடிச்சு, யாப்பா, என் பிரட்சினை இதான், எனக்கு என் அடி மரத்திலேயே பழங்கள் எல்லாம் காய்ச்சுடற மாதிரி என்ன மாத்திக்க போறேன், ஏன்னா அப்ப தான் சும்மா கால்நடையா நடந்து போற மானு, யானை மாதிரி மத்த ஜீவாராசிகளுக்கும் நான் பிரயோசனமா இருந்து என் வம்சத்தையும் பெருக்கிக்க முடியும் கொஞ்சம் பார்த்து உதவி செய்யப்பான்னு அதுக்கின்னு ஒரு சிறப்பான தகவமைப்பை வாங்கித் தக்க வச்சுகிட்டு, பொழப்ப மத்த தாவரங்கள்லேருந்து வித்தியாசமா அமைச்சுகிட்டு நீடுழி காலமா நம்மளோடவே கூடவே வாழ்ந்துகிட்டு வருதுக.

நல்ல இருந்துச்சா இல்லையான்னு சொல்லிபுட்டு போங்க...இல்லைன்னா வேறு ஏதாவது ஒரு ஊரு "காதலி தப்பி" ஓடிய கதையை பத்தி கதைப்போம்...

Friday, April 28, 2006

பூச்சியுண்ணும் நெப்பாந்தஸ் தாவரம்...!


மலேசியாவில் உள்ள நெப்பாந்தஸ் (Nepenthes) என்னும் ஒரு வகை செடி பூச்சிகளை சாப்பிட்டு உயிர் வாழ்கிறது. எப்படியெனில், அதன் அகண்ட ஜாடி போன்ற அமைப்பு தண்ணீருடன் கூடிய திரவத்தை அதன் அடிப்பகுதியில் கொண்டுள்ளது, அதனுள் செல்லும் எவையும் மரணக் குகைக்குள் நுழைந்தாகத்தான் பொருள். அப்படி உள்ளே சொன்றோ அல்லது தவறி விழுந்த பூச்சிகள் அத்திரவத்தினுள் மூழ்கி தன் உடம்பிலுள்ள கனிமங்களை இழந்து பிறகு அத்தாவரத்தினால் கிரகித்துக்கொள்ளப் படுகிறது.

இருப்பினும் அதற்கு யாரவது ஒரு ஆள் நமது இயற்கையில் அல்வா கொடுக்க இருக்க வேண்டுமல்லவா? அக் குடுவைக்குள் ஒரு வகை எறும்பு குடித்தனம் நடத்துகிறதாம், அது அத் தாவரத் தடாகத்தினுள் சென்று நீந்தி அங்கு சிக்கியிருக்கும் பூச்சிகளை இவர் கபளீகரம் செய்து விடுகிறாம்.

இது எப்படி இருக்குகுகுகு....(சூப்பர் ஸ்டார் ரஜினி ஸ்டைல்ல ஒரு முறை படிச்சுட்டு சிரித்சுடுங்க...ஹ்ஹா...ஹா.ஹா..)
Related Posts with Thumbnails